உன்னை
வருடும் காற்றைக்
கொஞ்சம் வரச்சொல்...
உன்
வாசம் எனக்குக்
கொஞ்சம் தரச்சொல்.
விண்மீன் தோழியிடம்
புன்னகையைக் கொடுத்தனுப்பு.
விரல்களின் வெம்மையை
இரவிடம் கொடுத்தனுப்பு.
இதழ்களின் குளுமையை
முகிலிடம் தந்தனுப்பு.
நினைவுகளை மெத்தையாக்கி
நிலவிடம் தந்தனுப்பு.
திகட்டாத அன்பைத்
தீந்தமிழிடம் சொல்லியனுப்பு.
என்
கற்பூரக் காதலை
அக்னியாய் அணைத்துக்கொள்.
கொஞ்சுதலில் குழந்தையாய்
கெஞ்சுதலில் இளமையாய்
நேசத்தில் தாய்மையாய்
முழுதாய் கிரகித்துக்கொள்.
கடலுக்குள் கலக்கும்
நதிபோல
காதலுக்குள் கலக்கலாம்
வா!
7 comments:
// விண்மீன் தோழியிடம்
புன்னகையைக் கொடுத்தனுப்பு.
விரல்களின் வெம்மையை
இரவிடம் கொடுத்தனுப்பு.
இதழ்களின் குளுமையை
முகிலிடம் தந்தனுப்பு.
நினைவுகளை மெத்தையாக்கி
நிலவிடம் தந்தனுப்பு.
திகட்டாத அன்பைத்
தேன்தமிழிடம் சொல்லியனுப்பு.//
வரிகள் தோறும் கருத்துமே
வழங்கிய அனைத்தும் பொருத்தமே
அறிய அனைவரும் எளிமையே
அமைந்த சொற்கள வலிமையே
நன்று !நன்றி!
புலவர் சா இராமாநுசம்
நல்லா இருக்கு தல... வேறென்ன சொல்ல...
அருமை... ரொம்ப நல்லாயிருக்கு.
நன்றாக இருக்கிறது நண்பரே....
விண்மீன் தோழியிடம்
புன்னகையைக் கொடுத்தனுப்பு.
இதழ்களின் குளுமையை
முகிலிடம் தந்தனுப்பு.
நினைவுகளை மெத்தையாக்கி
நிலவிடம் தந்தனுப்பு.
அருமை கலாநேசன் வாழ்த்துக்கள்
இனிய தீப ஒளி திருநாள் வாழ்த்துக்கள்..
கலக்குங்க கலக்குங்க
கருத்துரையிடுக