புதன், 27 அக்டோபர், 2010

கர்வா சவுத்

நேற்று வடக்கு மற்றும் வடகிழக்கு இந்தியாவில் கர்வா சவுத் (KARVA CHAUTH)  கொண்டாடப்பட்டது. திருமணமான இந்துப் பெண்கள் கணவனின் நீண்ட ஆயுள் வேண்டி நேற்று நிலவு வரும் வரை விரதமிருந்தார்கள் . நிலவு வந்ததும் அதை நீரிலோ, துப்பட்டா அல்லது சல்லடை வைத்தோ பார்த்து பின் கணவன் முகம் பார்ப்பார்கள். "கடவுளே என் கணவனுக்கு ஆரோக்யமான நீண்ட ஆயுள் கொடு, நான் சுமங்கலியாக (இவனைத் தனியே தவிக்கவிட்டுட்டு!) இறக்க வேண்டும்" என வேண்டிக்கொள்வார்கள்.



கர்வா என்றால் மண்கலசம். சௌத் (சௌதா) என்றால் நான்கு( அதாவது கார்த்திகை மாதத்தின் பௌர்ணமியில் இருந்து நான்காவது நாள் ). மண் கலசத்தில் நீரையோ அல்லது பாலையோ நிரப்பி அதில் பஞ்ச ரத்தினங்களை இட்டு தானமாகக் கொடுத்து கணவனுக்காக கடவுளிடம் வேண்டிக்கொள்ளும் பண்டிகை என்று பொருள்.


 அந்த காலத்தில் வெகு தொலைவில் வாக்கப்பட்டுப் போகும் பெண்கள், ஏதாவது  பிரச்சனை என்றால் தங்கள் குடும்பத்தை உடனடியாகத் தொடர்பு கொள்ள இயலாது. அதனால் நாத்தனார் அல்லது அருகில் உள்ள குடும்பத்துப் பெண்களை சகோதரியாக ஏற்று பிரச்சனைகளை பேசிக்கொள்ளவும் ஒருவருக்கு ஒருவர் உறுதுணையாக இருக்கவும் இந்தப் பண்டிகை பழங்காலத்தில் கொண்டாடப்பட்டது. இன்றோ சாமியார் மடத்தில் பூனை கட்டிய கதையாய், மருதாணி இட்டு வளையல் போட்டு புடவை கட்டும் பண்டிகையாகிப் போனது கர்வா சௌத்.



கர்வா சௌத் அன்று சூரிய உதயத்தில் இருந்து நிலவு வரும் வரை தண்ணீர் கூட குடிக்காமல் பெண்கள் கணவனுக்காக விரதமிருக்கிறார்கள். முன்தினமே கை நிறைய வளையல் வாங்கிக்கொண்டு மருதாணி இட்டுக்கொள்கிறார்கள். அன்று பெரும்பாலும் முகூர்த்த புடவைகளை கட்டிக்கொண்டு தெருவில் உள்ள பெண்களெல்லாம் ஒன்றாய் கூடி பூஜை செய்கிறார்கள்.
 உதயநிலா 
அன்று 
சந்திரனைப் பார்த்த 
சல்லடைத் தட்டுவழி 
இந்திரனைப் பார்த்தாள்
ரதி - அதன்பின் 
ஒவ்வொரு நாளும் 
விடிகிறது அவனுக்கு 
உதயநிலா முகம் பார்த்து...

ஞாயிறு, 24 அக்டோபர், 2010

ABCD காதல்

முஸ்கி: இந்த கவிதை சுமார் 10 வருடங்களுக்கு முன் ஓர் மாதநாவலின் அட்டையில் படித்தது.
A ன்னுடைய  இதயத்தில்
B ம்பமாய் பதிந்தவளே - உன்
C ங்காரக் கூந்தலிலே
D சம்பர் பூ சிரிக்குதடி!
E ப்போது மட்டுமல்ல உன்னை
F ப்போது நினைத்தாலும்
G ல்லென்று மனம் குளிருதடி!
H ச்சமாய் விழும் உன்பேச்சில்
I ம்புலனும் நிறைவு கொள்ளுதடி!
Ji ல்லென்ற பார்வை மூலம்
K லி செய்யும் விழியிரண்டும் 
L ல்லையில்லா இன்பமடி!
M ம்முடைய பேச்சும் 
N ன்னுடைய மூச்சும்
O ன்றாய் உன் நினைவைத் தூண்டுதடி.
P ரியமாய்ப் பேச வார்த்தைகள் 
Q வில் நிற்குதே 
S எனச் சொல்லடி!
T குடிக்கையிலும் 
U ன் நினைவு.
V ளையாடப் போனாலும் உன்நினைவு.
We ல்கம் எனச்சொல்லும் மருத்துவமனை போய்
X ரே எடுத்தாலும் உன் நினைவு.
Y யாரமாய் நிற்கும் ஓவியமே 
Z ட்டென்று எனக்குச் சம்மதம் சொல்லடி...

டிஸ்கி: இந்தக் கவிதைக்கு புகைப்படம் தேடுகையில் இது கிடைத்தது.

ஞாயிறு, 17 அக்டோபர், 2010

இப்படித்தான் நீயும்

இப்படித்தான் நீயும் ...
வேறோர் குழந்தையுடன்
விளையாடிக் கொஞ்சினால்
ஓடிவந்தெனைக் கட்டிக்கொள்கிறாள்
செல்ல மகள்.
இப்படித்தான் நீயும்
அன்றோர் நாள்
காதலைச் சொன்னாய்
குழந்தை மனதோடு........


இன்னும் கொஞ்சம்...

ஒவ்வொரு தேர்வு
எழுதி முடித்ததும்
உள்ளுக்குள் தோன்றும்
இன்னும் கொஞ்சம்
நல்லா படிச்சிருக்கலாம்.
ஒவ்வொரு முறை
சந்தித்துப் பிரிகையிலும்
உள்ளுக்குள் தோன்றும்
இன்னும் கொஞ்சம்
உன்னோடு பேசியிருக்கலாம்....

ஞாயிறு, 10 அக்டோபர், 2010

அமுதான தேன் விஷமாவதேன்?

பார்த்தேன் சிரித்தேன் பக்கத்தில் அழைத்தேன்
அன்று உனைத்தேன் எனநான் நினைத்தேன்
அந்த மலைத்தேன் இதுவென மலைத்தேன்.
கொடித்தேன் இது எங்கள் குடித்தேன் என
ஒரு படி தேன் பார்வையில் குடித்தேன்
துளிதேன் சிந்தாமல் களித்தேன் - ஒரு
துளிதேன் சிந்தாமல் களித்தேன்
கைகளில் அணைத்தேன் அழகினை ரசித்தேன்.


அடடா.... சொல்ல வந்தத விட்டுட்டு பாடல் வரிகள் போயிட்டே இருக்கே....தேனில் ஊறிய கவியரசரின் தித்திக்கும் வரிகள். (அப்பாடா திரும்பவும் பதிவுக்கு வந்தாச்சு.)



தேன். காலங்காலமாக நம் வாழ்க்கையில் அங்கம் வகிக்கிறது. தேனைப் பற்றிய குறிப்பு ரிக் வேதத்திலேயே உள்ளது. உணவாய் மருந்தாய் அன்றாட வாழ்வில் நாம் தேனைப் பயன்படுத்துகிறோம். என்னது....தேனின் பயன்கள் என்னவா? பங்காளிகிட்ட கேளுங்க. (என்னது பங்காளி யாரா?).


தேன் நோய் எதிர்ப்பு சக்தியை கொடுக்கும், நுண்ணுயிர் தாக்குதலில் இருந்து காப்பாற்றும் அப்படின்னு நினைத்து அடிக்கடி தேன் உண்பவரா நீங்கள். உங்களுக்குத்தான் இப்பதிவு.



தேசிய அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் மையம் (CSE ) தில்லியில் அதிகமாய் விற்பனையாகும் 12 கம்பெனிகளின் தேன்களை ஆய்வு செய்தது. இந்த ஆய்வின் நோக்கம் தேனில் கலந்துள்ள வேதிப்பொருட்களை கண்டறிவது. இதுவரை நாம் இயற்கையான சுத்தமான தேன் என்று விளம்பரத்தைப் பார்த்து நம்பிக் கொண்டிருந்த அத்தனைத் தேனிலும் (Hitkari தேனைத் தவிர) ஒன்றுக்கு மேற்ப்பட்ட ஆன்டிபயாடிக் என்ற வகையைச் சேர்ந்த நுண்ணுயிர்க்கொல்லி மருந்துகள் கலந்துள்ளன. ஆக்சிடெட்ராசைக்ளின், க்லோராம்பிநிக்கால், அமாக்சிசிலின், சிப்ரோப்லோக்சசின், எரித்ரோமய்சின் மற்றும் என்றோப்லோக்சசின் ஆகிய மருந்துகள் தேனில் கலந்துள்ளன.


இவையெல்லாம் மருந்துகள் தானே சாப்பிட்டா உடம்புக்கு நல்லதுதானேன்னு கேக்றீங்களா?
தேவை இல்லாத போது மருந்து உட்கொண்டால் நம் உடல் அந்த மருந்துக்கு பழகிடும். அப்புறம் நோய் வரும் போது அந்த மருந்தால் குணமடையாது. அது மட்டுமல்லாமல் அடிக்கடி உட்கொள்ளும் மருந்துகளால் பக்க விளைவுகளும் வரும். உதாரணத்திற்கு நீங்கள் உண்ணும் தேனிலோ/உணவிலோ ஆக்சிடெட்ராசைக்ளின் தொடர்ந்து இருந்தால் இரத்த சம்பந்தமான நோய்கள் வரும். ஈரல் பாதிப்படையும்.



அது சரி. இந்த மருந்துகளெல்லாம் எப்படி தேனில் கலந்தன?
1965-ல் பஞ்சாப் விவசாயப் பல்கலைகழகம் இத்தாலியில் இருந்து கொண்டுவந்த புதிய வகைத் தேனீக்களை அறிமுகம் செய்தது. இந்திய தட்பவெட்பம் ஒத்துவராமல் அடிக்கடி அவை நோய்வாய்ப்பட்டதால் தேனீ வளர்ப்பவர்கள் அதற்கு ஆன்டிபயாட்டிக் மருந்துகளும் அதிக உற்பத்திக்காக ஆக்சிடெட்ராசைக்கிலினும் தெளிக்க ஆரமித்தனர். நாளடைவில் மருந்து தெளிப்பது கட்டாயமாகிவிட்டது. 
சீப்பாய்க் கிடைக்கிறதென்று சீனாவில் இருந்து இறக்குமதி செய்யாமல் சிறு வியாபாரிகளிடம் இருந்து தேனை வாங்குவதால் தான் Hitkari தேனில் மருந்துகள் எதுவும் இல்லையாம்.



தேனுக்கென்று தரக் கட்டுப்பாடுகள் கிடையாதா?
இருக்கு....ஆனா இல்ல. அதாவது இந்தியாவில் விற்கப்படும் தேனுக்கென்று சில அடிப்படைச் சோதனைகள் மட்டுமே உள்ளது. (அதாவது சக்கரை எவ்வளவு இருக்கு? ஈரப்பதம் எவ்வளவு இருக்கு?). அதே சமயம் இந்தியாவிலிருந்து ஏற்றுமதியாகும் தேனுக்கென்று தனியே கடுமையான தரக்கட்டுப்பாட்டு சோதனைகள் உள்ளன. (ஆன்டிபயாடிக் கலப்பட சோதனை உட்பட). இதைப் பயன்படுத்தி வெளிநாட்டுக்கு மட்டும் சுத்தமானத் தேனை அனுப்பிவிட்டு கலப்படத் தேனை இந்தியாவில் விற்கிறார்கள்.
ஆஸ்திரேலியா மற்றும் சுவிசில் இருந்து இந்தியாவிற்கு இறக்குமதியாகும் தேனிலும் இதே நிலைதான். அதே சமயம் அவர்கள் நாட்டில் அதே கம்பனிகள் விற்கும் தேன் தரமானது.

 சரி கடையில் கிடைக்கும் எல்லா வகைத் தேனிலும் மருந்து கலந்துள்ளதே... இப்போ என்ன செய்யலாம்? 
  1. பாலுடன் கலந்து குடித்து பயில்வானாகிறேன், சுடுதண்ணியில் கலந்து குடித்து சுள்ளானாகிறேன் என தினமும் தேன் குடிப்பதைத் தவிருங்கள்.
  2. விளம்பரங்களைப் பார்த்து இது இயற்கையானது, சுத்தமானது குழந்தைகள் வளர கட்டாயம் தேவை என்று நம்பி குழந்தைகளுக்கு தினமும் தேன் கொடுக்காதீர்கள். அது அவர்கள் நோய் எதிர்ப்பு சக்தியை பாதிக்கலாம்.
  3. 'மாலையில்  சந்தித்தேன்  மையலில்  சிந்தித்தேன்   காதலர் தீண்டும் போது கைகளை   மன்னித்தேன்' - இது போன்ற பாடல்கள் கேட்டு செவிவழி மட்டும் தேனருந்தலாம்.                                                                                                           

Quote

Followers