ஞாயிறு, 25 அக்டோபர், 2009

உயிரெழுத்து

அன்னையர் தினத்தில் பிறந்தவளே - என்
ஆசை வானில் பரப்பவளே
இம்சை வரங்கள் பல தினமும்
ஈந்தருள் எனக்கு புரிபவளே
உள்ளமெல்லாம் உள்ளவளே - எனை
ஊக்குவிக்கும் நல்லவளே
எட்டும் வெற்றி யாதிலுமே
ஏணியாக இருப்பவளே
ஐயமின்றி சொல்கின்றேன்
ஒவ்வொரு நொடியும் உன்பெயரே
ஓயாது ஒலிக்கும் என் மனதில்......

நீ

நான்
தேடிச்சுற்றிய
பத்தாம் கிரகம்
ஓடித்திரிந்த
ஒன்பதாம் திசை
பாடி மகிழ்ந்த
எட்டாம் ஸ்வரம்
கூடி ருசித்த
ஏழாம் சுவை
என் அணுவிலும் கலந்த
ஆறாம் பூதம்
ஆசையாய் நான் படித்த
ஐந்தாம் வேதம்
நல்லதையே சொல்லும்
நான்காம் காலம்
நல்வழி காட்டிய
மூன்றாம் விழி
என்னை வளர்த்த
இரண்டம் தாய்
எல்லாம் ஆகிய
ஒரே மனைவி




வியாழன், 15 அக்டோபர், 2009

வணக்கம்

நேசமிகு நெஞ்சங்களே,
வணக்கம். இது பிரபஞ்சத்தை சிறு பேனாவில் அடைக்கும் கனவுக்காரனின் வலைப்பூ. எவர் மனதும் புண்படாமல் நான் எண்ணுவதை எழுதுகிறேன்.
தீராத தமிழ் காதலுடன்,
கலாநேசன்.

Quote

Followers