செவ்வாய், 30 நவம்பர், 2010

மணநாள்

உலகிலேயே அழகான வீடு
உலகிலேயே அழகான நகரம்
உலகிலேயே அழகான பாலம்
உலகிலேயே அழகான நீர்வீழ்ச்சி
 உலகிலேயே அழகான குழந்தை
உலகிலேயே அழகான கண்கள்
உலகிலேயே அழகான செடி
 
இப்படி உலகின் மிகச்சிறந்த பல விஷயங்கள் இருப்பது போல இன்று என் வாழ்வில் மிக அழகான நாள். அதாவது என் காதலி மனைவியான நாள்.

 நீ 
நான்
தேடிச்சுற்றிய
பத்தாம் கிரகம்
ஓடித்திரிந்த
ஒன்பதாம் திசை
பாடி மகிழ்ந்த
எட்டாம் ஸ்வரம்
கூடி ருசித்த
ஏழாம் சுவை
என் அணுவிலும் கலந்த
ஆறாம் பூதம்
ஆசையாய் நான் படித்த
ஐந்தாம் வேதம்
நல்லதையே சொல்லும்
நான்காம் காலம்
நல்வழி காட்டிய
மூன்றாம் விழி
என்னை வளர்த்த
இரண்டம் தாய்
எல்லாம் ஆகிய
ஒரே மனைவி.

36 comments:

எல் கே சொன்னது…

உங்களுக்கும் உங்கள் மனைவிக்கும் இனிய திருமண நாள் வாழ்த்துக்கள் கலாநேசன்

பெயரில்லா சொன்னது…

திருமண நாள் வாழ்த்துக்கள் நண்பரே :)

அன்பரசன் சொன்னது…

மணநாள் வாழ்த்துக்கள்.

ஜெயந்த் கிருஷ்ணா சொன்னது…

மணநாள் வாழ்த்துக்கள்.

ப.கந்தசாமி சொன்னது…

மணநாள் வாழ்த்துக்கள்.

Chitra சொன்னது…

பத்தாய் - ஒன்றாய் - எல்லாமுமாக - சிறந்து நிற்கும் உங்கள் மனைவிக்கு - நீங்கள் எழுதியுள்ள கவிதை, அபாரம்!
HAPPY ANNIVERSARY!

சிவராம்குமார் சொன்னது…

மணநாள் வாழ்த்துக்கள் நண்பா!

சேலம் தேவா சொன்னது…

அண்ணி இரண்டாம் தாய்..!! பாப்பா மூன்றாம் தாயா..? நீங்க கொடுத்து வச்சவர்தான்..!! கவிதைக்காதலன் கணவனாக அமைந்ததற்கு அண்ணியும் கொடுத்து வச்சிருக்கணும்..!!இனிய திருமண நல்வாழ்த்துகள்..!!

வெங்கட் நாகராஜ் சொன்னது…

உங்களுக்கும் உங்கள் காதல் மனைவிக்கும் இனிய திருமண நாள் வாழ்த்துக்கள். ஞாயிறு சந்தித்தபோது சொல்லவேயில்லை. அன்றே வாழ்த்து சொல்லியிருப்போமே! :))))

'பரிவை' சே.குமார் சொன்னது…

திருமண வாழ்த்துக்கள் திரு & திருமதி. கலாநேசன்.
கவிதை வரிகளில் உங்கள் காதலை சொல்லிவிட்டீர்கள்....
நீடூழி வாழ வாழ்த்துக்கள்.

ADHI VENKAT சொன்னது…

உங்கள் மனைவிக்காக எழுதிய கவிதை அழகு. உங்களுக்கும் உங்கள் மனைவிக்கும் திருமணநாள் வாழ்த்துக்கள்.

Thenammai Lakshmanan சொன்னது…

அட சூப்பர் சூப்பர் சூப்பர்.. கலா நேசன்.. உங்களிருவருக்கும் மணநாள் வாழ்த்துக்கள்..

முத்துலெட்சுமி/muthuletchumi சொன்னது…

மணநாள் வாழ்த்துக்கள்..
வாழ்கவளமுடன் :)

vanathy சொன்னது…

திருமண நாள் வாழ்த்துக்கள் !
nice photos.

இராகவன் நைஜிரியா சொன்னது…

திருமண நாள் வாழ்த்துகள். அன்பும், செல்வமும் பெருக வாழ்த்துகள்.

இன்று போல் என்றும் வாழ்க.

எம்.ஏ.சுசீலா சொன்னது…

மண நாள் வாழ்த்துக்கள்.கவிதையை இந்தியாகேட் சந்திப்பிலேயே படித்து ரசித்து விட்டேன்.

R. Gopi சொன்னது…

மண நாள் வாழ்த்துக்கள் கலாநேசன். படங்கள் அருமை. கவிதை அதை விட அருமை.

ஹேமா சொன்னது…

எவ்வளவு அழகாச் சொல்லிட்டீங்க கலாநேசன்.
வாழ்த்துகள் உங்களுக்கும் உங்கள் துணைக்கும் !

சைவகொத்துப்பரோட்டா சொன்னது…

திருமணநாள் வாழ்த்துக்கள் கலாநேசன்.

a சொன்னது…

திருமணநாள் வாழ்த்துக்கள்!!!!

Unknown சொன்னது…

வாழ்க வளமுடன் !

செல்வா சொன்னது…

ஹய்யோ படங்களும் உங்க கவிதையும் கலக்கல் அண்ணா ..!!

பெயரில்லா சொன்னது…

Ur wife is Greatly Honoured!!

Happy Anniversary!!!

ஜெயந்தி சொன்னது…

உங்கள் இருவருக்கும் திருமண நாள் வாழ்த்துக்கள்!

சிவகுமாரன் சொன்னது…

காதல் மணநாள் வாழ்த்துக்கள் நண்பா.

சௌந்தர் சொன்னது…

திருமணநாள் வாழ்த்துக்கள் புகைப்படங்கள் எல்லாம் சூப்பர்

Unknown சொன்னது…

மண நாள் வாழ்த்துக்கள் கலாநேசன்.

கவிதை அசத்தலாக இருக்கிறது ...

Ananthi (அன்புடன் ஆனந்தி) சொன்னது…

எண்களில் தொடங்கி
உங்கள் மனைவி மேல் கொண்ட,
அளவில்லா காதலை தெளித்து
அருமையாய் ஒரு கவிதை...!! :-))

உலகிலேயே அழகான எல்லாம் காட்டினீங்க..

உலகிலேயே அழகான முறையில் மனைவிக்கு..

திருமண நாள் வாழ்த்து சொன்னவர் நீங்க தாங்க...!!!

உங்கள் இருவருக்கும், இனிய திருமணநாள் நல்வாழ்த்துக்கள்..!!

மோகன்ஜி சொன்னது…

அழகான வாழ்த்து! உங்கள் இருவருக்கும் உளம கனிந்த மணநாள் வாழ்த்துக்கள்

சமுத்ரா சொன்னது…

wish you a happy wedding anniversary!

Unknown சொன்னது…

அற்புதமான வரிகள்
வாழ்த்துக்கள்

ஸாதிகா சொன்னது…

திருமணநாள் நல் வாழ்த்துக்கள்.சொல்லி இருந்த விதம் அருமை கலா நேசன்.

Unknown சொன்னது…

மணநாளுக்கு வாழ்த்திய அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

raji சொன்னது…

சற்று தாமதமாக அனுப்பியுள்ள "மணநாள் வாழ்த்துக்கள்"

இராஜராஜேஸ்வரி சொன்னது…

மனதை மகிழ்விக்கும் மணநாள் கவிதை.
எத்தனை நாள் தாமதமானால் என்ன?
எல்லா நாளும் மணநாள் போல
இனிது வாழ வாழ்த்துக்கள்.

shihana சொன்னது…

happy maried life.neenga mananala sonna vitham sweet.

Quote

Followers