சனி, 14 மே, 2011

நீயின்றி அமையாது உலகு

உன்னில் துவங்கி
உன்னில் முடிகிறது
உலகம் எனக்கு.

உனக்கென காத்திருக்கும்
நிமிடங்கள் வருடமென
நிச்சயம் சொல்லமாட்டேன்.
நீயில்லா நிமிடங்கள்
எப்படிக் கடந்தால்
எனக்கென்ன?
என் கவனமெல்லாம்
என்னோடு நீயிருக்கும்
நிமிடங்கள் பற்றியது.
கண்கள் சந்திக்கும்
அந்தக்
கற்கண்டு நிமிடத்தில்
கடிகார முட்களுக்கு
காலுடைய வேண்டுகிறேன்.

















உன்னில் துவங்கி
உன்னில் முடியட்டும் 
உலகம் எனக்கு....

வைகறைப் பனி
அரைத்தூக்க முத்தம்.

கதிரவ தரிசனம்
கண்விழித்துப் பார்க்கிறாய்.

காற்றிலசையும் இலைகள்
தலைகோதும் விரல்கள்.

காதற் பறவைகள்
கைகோர்த்த நினைவுகள்.

உரைக்கும் வெயில்
உணர்ச்சிவச சுடுசொல்.

ஊமைவெயில் மேகம்
உன்னுடைய பொய்க்கோபம்.

மாலையும் அந்தியும்
மயக்கும் உரையாடலூடல்.

வெண்ணிலா
விளக்கணைத்தபின்  நீ.

உன்னில் துவங்கி
உன்னில் முடியும்
உலகம் எனக்கு...








8 comments:

Unknown சொன்னது…

காதல் என்றும் சொல்லலாம்,,

JEGANKUMARSP சொன்னது…

Good one...!

Unknown சொன்னது…

@ கே.ஆர்.பி.செந்தில் : நீங்க சொல்ற மாதிரியும் சொல்லலாம்....

Unknown சொன்னது…

@ கோவை2தில்லி : நன்றிங்க...

Unknown சொன்னது…

@ Jegankumar.SP : வா ஜெகா. ரொம்ப நாளா ஆளையே காணோம்.....

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

>>>உன்னில் துவங்கி
உன்னில் முடியும்
உலகம் எனக்கு...

கவிதையில் தொடங்கி கவிதையில் முடியட்டும் நம் இலக்கியம்

Thenammai Lakshmanan சொன்னது…

உன்னில் துவங்கி
உன்னில் முடியும்
உலகம் எனக்கு.../// அருமை கலாநேசன்..

ரிஷபன் சொன்னது…

அழகான கவிதை.. எழுத்தில் துவங்கி மனதில் பதிந்த கவிதை.

Quote

Blog Archive

Followers