சனி, 28 மே, 2011

விசில் போடு!


IPL கிரிக்கெட் திருவிழாவில் இறுதிப்போட்டி இன்னும் இரண்டு மணி நேரத்தில் துவங்கப்போகிறது. விளையாட்டை விட வியாபாரமே இதில் முக்கிய பங்கு வகித்தபோதிலும் இளம் வீரர்களுக்கான களம் என்பதாலும் இருபது ஓவர்கள் மட்டுமே என்பதாலும் எனக்குப் பிடிக்கிறது. ஒவ்வொரு வருடமும் வீரர்களை ஏலத்தில் எடுப்பதால் யார் யார் எந்த அணியில் விளையாடுகிறார்கள் என்று விளங்கிக் கொள்ளும் முன்னரே ஒரு மாதம் ஓடிவிடுகிறது. அப்படித்தான் இம்முறையும் கடந்த ஏழு வாரங்களாக தினமும் குறைந்தது ஒரு மணி நேரம் IPL போட்டிகளைப் பார்த்து வருகிறேன்.

இன்று நடக்கும் இறுதிப் போட்டியில் சென்னையும் பெங்களூருவும் மோதுகின்றன.  கடந்த நான்கு வருடங்களாக நடக்கும் இப்போட்டித் தொடரில் அனைத்துத் தொடர்களிலும் அரையிறுதிக்குத் தகுதிபெற்ற ஒரே அணி சென்னை மட்டுமே.
  • இரண்டாயிரத்தெட்டாம் ஆண்டு நடந்த முதல் IPL தொடரின் இறுதிப் போட்டியில் கடைசி பந்தில் ராஜஸ்தான்   அணியிடம் தோற்று கோப்பையைக் கோட்டை விட்டது.
  • இரண்டாம் தொடரில் அரையிறுதிப் போட்டியில் பெங்களூருவிடம் தோற்று வெளியேறியது.
  • சென்ற வருடம் முதல் போட்டியில் அப்போதைய நடப்புச் சாம்பியனான ஹைத்ரபாத்துடன் தோல்வியில் துவங்கிய சென்னை இறுதிப் போட்டியில் மும்பையை 22 ரன்கள் வித்தியாசத்தில் வென்று கோப்பையைக் கைப்பற்றியது.
  • நான்காம் தொடரின் சூப்பர் இன்னிங்க்சில் முதல் போட்டியில் பெங்களூருவை வென்று இறுதிப்போட்டிக்குள் நுழைந்துள்ளது.

மூன்றாவது முறையாக இறுதிப்போட்டியில் விளையாடும் சென்னை வெல்ல நல்வாழ்த்துக்கள்.

UPDATE: 58 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அபார வெற்றி.




Quote

Blog Archive

Followers