வெள்ளி, 21 மே, 2010

மனப்பெண்

கல்லூரிக் காலத்தில்
காதலிக்கும் யோகமில்லை
அலுவலகம் வந்தபின்
அமையுமென்றும் நினைக்கவில்லை!

உண்டு குடித்து உறங்கி
ஊர்சுற்றித் திரிந்தபோதும் 
கண்டுகொள்ளவேயில்லை என்னுள்
காதல் விதை உறங்கியதை!

உன்புன்னகை சிந்திய 
பொன்னொளி பட்டதும்
உறங்கிய விதையது
உயிர்பெற்றது விருட்சமாய்!

எப்படிச் சொல்வதென்று
எண்ணித் தவிக்கையில்
தேவதை நீயே
தித்திக்கும் வரம்தந்தாய்!

வாகனத்தில் உடனமர்ந்து
வருவதற்கே தயங்கியவள்
வாழ்க்கை முழுவதுமே
உடன்வர சமதித்தாய்!

நீயென் மூச்சுக்காற்றில்
ஊதிய பந்து
முதல்முதல் பாடிய
காவடிச் சிந்து!

மழைத்துளி தீண்டலில்
மணக்கின்ற பூமியாய்
மனதுக்குள் மலர்வெடிக்க
மகிழ்ந்தேன் நான்!

இன்று
மனப்பெண்ணே
என்னருகில்
மணப்பெண்ணாய்........

7 comments:

அகல்விளக்கு சொன்னது…

வாவ்...

அட்டகாசமான கவிதை சார்...

Unknown சொன்னது…

நன்றி அகல்விளக்கு

Unknown சொன்னது…

//காதல் விதை உறங்கியதை!//

அதான் முளைச்சு மரமாகிடுச்சே....

Unknown சொன்னது…

KRP அண்ணே,
வருகைக்கு நன்றி

//காதல் விதை உறங்கியதை!//
அதான் முளைச்சு மரமாகிடுச்சே....

"பார்வை ஒழி
பட்டபின் தான்
காதல் விதை
முளைத்தது"

Unknown சொன்னது…

//காதல் விதை உறங்கியதை!//
அதான் முளைச்சு மரமாகிடுச்சே....

அட, நீங்க என்னை சொன்னீங்களா?
நாங்கல்லாம் first yearlaye ஆரமிசிட்டம்ல.
(அதை பற்றி அடுத்த பதிவில்)

இந்த கவிதை நண்பனைப் பற்றியது.

பெயரில்லா சொன்னது…

இன்று
மனப்பெண்ணே
என்னருகில்
மணப்பெண்ணாய்........

"Arumaiyana vari" Super.

KUTTI சொன்னது…

கவிதை நன்றாக இருக்கிறது.

மனோ

Quote

Followers