ஞாயிறு, 2 மே, 2010

மனதின் வார்ப்பு

கல்லூரி வாழ்க்கைக்குள்
காலெடுத்து வைக்கும்வரை
நட்புக்கும் எனக்கும்
நாலாம் பொருத்தம்தான்.

வகுப்பு துவங்கியதும்
வாரம் சில சென்றபின்பு
வளாகத்தில் நிகழ்ந்ததுநம்
முதல் சந்திப்பு.

மனதில் குழப்பத்துடன்
சரிஎது தவறெதுவென
சரிவரத் தெரியாமல்
மாணவர்க் கூட்டத்தில்
தனிமையில் நான் வாட
துணைக்கரம் நீட்டிய
தோழி நீ.

காணாமல் போனஎனை
கண்டெடுத்துத் தந்தவள் நீ.
எனக்கு எதெல்லாம்
நன்றாக வருமென்று
நீ சொல்லித்தான்
எனக்கேத்  தெரியவரும்.

வகுப்பறைக்குள் அமர்ந்து
வாதிட்ட நிமிடங்களும்
நடந்து பேசி சிரித்த
நல்ல நினைவுகளும்
என்னுள் நிலைத்திருக்கும்
நானுள்ள வரையில்...

வெள்ளைத் தாளாய்
இருண்ட என் மனதில்
கள்ளி நீதான்
கவிதை எழுதினாய்.

செதுக்குவதாய் நினைத்து
சிலசமயம் நீஎன்னை
சிதைத்தும் இருக்கிறாய் - நாம்
மணிக்கணக்கில் பெசியதுமுண்டு
மாதக்கணக்கில் பேசாமலிருந்ததும் உண்டு
ஆனாலும்
நட்பென்ற  சொல்லை
யார் சொன்னாலும்
உன்முகம் எனது
உள்மனதிரையில்
ஒளிர்கிறதே........

மனதின் வார்ப்பாய்.

2 comments:

JEGANKUMARSP சொன்னது…

Nice one machi... how are you getting time to write kavithai now a days... surprising!

Unknown சொன்னது…

I used to write very rarely. This is also a old kavithai about our friend.

Quote

Followers