சனி, 12 நவம்பர், 2011

புகைப்பிடிக்க புதிய விதிகள்

இந்திய சுகாதரத்துறை அமைச்சகம் அண்மையில் திரைப்படம் மற்றும்  தொலைக்காட்சி நிகழ்சிகளில் புகைப்பிடிக்கும் காட்சிகளுக்கென புதிய விதிமுறைகளை வெளியிட்டுள்ளது. இந்த விதிமுறைகள் வரும் திங்கட்கிழமை (14 - 11  - 2011 ) முதல் படமாக்கப்படும் அனைத்துக் காட்சிகளுக்கும் பொருந்தும். 
  • வழக்கமாக புகைப்பிடிக்கும் காட்சிகளில் திரையின் கீழ் "புகைப்பிடித்தல் உடல்நலத்திற்கு கேடு" என்ற வரிகள் போடுவார்கள். அதனோடு சேர்த்து கதாநாயகனே புகைப்பிடித்தலின் தீங்கைப் பற்றி உங்களோடு குறைந்தது  20 நொடிகள் பேசுவார். இந்தக்காட்சி இருமுறை (படத்தின் துவக்கத்திலும் படத்தின் நடுவிலும்) காட்டப்படும். (நல்ல பஞ்ச் டயலாக் யோசிக்கலாம்!)
  • புகைப்படத்தின் துவக்கத்திலும் நடுவிலும் குறைந்தது 30 நொடிகள் புகைப்ப்டிதலின் தீமையைப்பற்றிய விளம்பரம் காட்டப்படவேண்டும்.
  • சிகரெட் மற்றும் புகையிலைப் பொருட்களின் கம்பெனிப் பெயர்கள் (Brand Name)  காண்பிக்கக் கூடாது. 
  • தணிக்கைக் குழுவில் சுகாதாரத்துறையில் இருந்தும் ஒருவர் பங்கேற்பார். புகைப்பிடிக்கும் காட்சியின் அவசியத்தை விளக்கிச் சான்றிதல் பெற வேண்டும்.

 புகைப் பழக்கம் நுரையீரலைப் பாதிக்கும் என்பதும் அதன்பின் நுரையீரல் புற்று நோய் வரும் என்பதும் அனைவரும் அறிந்ததே. நுரையீரல் புற்று நோயால் பாதிக்கப்பட்டு அதன் பின்னர் 5 வருடங்களுக்கு மேல் உயிர் வாழ்பவர்கள் வெறும் 14 சதவீதம் மட்டுமே (மற்ற புற்று நோய்களுக்கு சராசரியாக 52  சதவீதம்) என்பதை நினைவில் கொள்க.


புகைப்பழக்கத்தால் புற்றுநோய் வர நீங்கள் புகைப்பிடிக்கத்தேவையில்லை. புகைப்பிடிப்பவரின் நண்பனாகவோ மனைவியாகவோ குடும்பத்தில் ஒருவராகவோ புகைக்கும் போது அருகில் இருந்தாலே போதும். (Passive Smoking ).


6 comments:

உலக சினிமா ரசிகன் சொன்னது…

குண்டாய் இருக்கும் பெண்ணின் அக உளைச்சல்களை மிக அற்ப்புதமாக படமாக்கி உள்ளார் ஒரு பெண் இயக்குனர்.
ஆண் இயக்குனர்கள் தொட முடியாத உயரத்தில் காட்சிகள் அமைந்துள்ள
FAT GIRL என்ற படத்திற்க்கு பதிவிட்டுள்ளேன்.
வருகை புரிந்து கருத்துரைக்கவும்.

உலக சினிமா ரசிகன் சொன்னது…

சென்சார் போர்டே தேவையில்லை.
மேலை நாடுகள் போல ஒவ்வொரு படமும் எந்த வயதினர் பார்ப்பதற்க்கு உரியது என்று சான்றிதழ் மட்டும் வழங்கினால் போதுமானது.

SURYAJEEVA சொன்னது…

இவ்வளவு கஷ்டப்படாமல், சிகரெட்டே தயாரிப்பை நிறுத்தி விட்டால் இன்னும் நல்லா இருக்குமே... ஓ வருமானம் போயிடுமோ

r.v.saravanan சொன்னது…

புகை பிடிப்பவர் மட்டுமில்லாமல் புகை பிடிக்கதவருக்கும் கஷ்டம் தான்

G.M Balasubramaniam சொன்னது…

சிகரெட் புகைப்பதை நிறுத்த விழிப்புணர்ச்சி மட்டும் போதாது. புகை பிடிப்பவர் நிறுத்த வேண்டும் என்பதில் உறுதி அவசியம்.

வெங்கட் நாகராஜ் சொன்னது…

கிடைக்கிறது அதனால் புகைப் பிடிக்கிறார்கள்... கிடைக்காமலேயே போய்விட்டால்...

ஆனால் அரசாங்கத்திற்கு வருமானம் புகையிலையிலிருந்தும், சாராயத்திலிருந்தும் தானே நிறைய வருகிறது......

Quote

Followers