புதன், 24 நவம்பர், 2010
ஒற்றை விரல் ஓவியம்
பேருந்துப் பயணத்தில்
பின்புறம் திரும்பி
பேசுவதுபோல் ஒன்று...
புத்தகக் குழந்தைகளை
மார்பில் தாங்கியபடி
புன்னகைப்பது போல் ஒன்று...
அலுவல் நிமித்தமாய் - நான்
அயலூர் செல்கையில்
கையசைப்பது போல் ஒன்று...
சமையலறைக் கரப்பைபார்த்து
அலறித்துடித்து நீ
அஞ்சுவதுபோல் ஒன்று...
கடைத்தெரு போயெனை
காய்கறி வாங்கச்சொல்லி
கெஞ்சுவதுபோல் ஒன்று...
பிறக்காதக் குழந்தையின்
பிஞ்சுவிரல் பிடித்து
கொஞ்சுவதுபோல் ஒன்று...
இப்படி நீ
புன்னகைப்பது...பூப்பறிப்பது...
வெட்கப்படுவது... வேடிக்கை பார்ப்பது...
முட்கள் குத்தியது...முகப்பரு வந்ததென
ஒவ்வொரு நிகழ்வையும்
ஓவியமாய் வரைந்தேன்.
பின்னொருநாள்
தூரிகை எல்லாம்
தோற்றுப்போனது -நீ
தொட்டுத்தொட்டு வரைந்த
ஒற்றை விரல் ஓவியத்தில்...
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
Quote
Blog Archive
-
►
2011
(58)
- ► செப்டம்பர் (4)
-
▼
2010
(47)
- ► செப்டம்பர் (5)
21 comments:
கவிதை அழகாய் இருக்கிறது பாராட்டுக்கள்
நல்லா இருக்கு கலாநேசன். அந்த ஓவியம் (lady in the moonlight)சூப்பர். இப்போதான் பெரிய சைஸ் ஒன்னு வாங்கினேன்!
முடித்த விதம் அழகாய் இருக்கிறது!
arumaiyaana kavithai annaa..
உங்க கவிதையும் ஒரு ஓவியம் போலதாண்ணே..!!
கவிதையும் அதற்கேற்ற ஓவியமும் அருமை நண்பரே.
//பிறக்காதக் குழந்தையின்
பிஞ்சுவிரல் பிடித்து
கொஞ்சுவதுபோல் ஒன்று...//
:-)))
கலக்கல்!!!!!!
கவிதை நல்லாயிருக்குங்க..
super kavithai.
அழகு ....
கலா நேசன்....
ரசித்தேன்....
அழகாய் இருந்தது.
அருமையான வரிகள்
//வேடிக்கை பார்ப்பது...
முட்கள் குத்தியது...முகப்பரு வந்ததென
ஒவ்வொரு நிகழ்வையும்
ஓவியமாய் வரைந்தேன்.//
ரொம்ப அருமையா இருக்கு அண்ணா ..!!
@ நிலாமதி : நன்றி
@ Gopi Ramamoorthy : நன்றி. ஆமாங்க, ஓவிய ராஜாவின் (ராஜா ரவி வர்மா) இந்த ஓவியம் எனக்கும் மிகப் பிடிக்கும்.
@ சைவகொத்துப்பரோட்டா : நன்றி
@ வெறும்பய : நன்றி
@ Chitra : நன்றி
@ சேலம் தேவா : நன்றி
@ வெங்கட் நாகராஜ் : நன்றி
@ சேட்டைக்காரன் : நன்றி
@ Riyas : நன்றி
@ vanathy : நன்றி
@ sakthi : நன்றி
@ கோவை2தில்லி : நன்றி
@ THOPPITHOPPI : நன்றி
@ ப.செல்வக்குமார் : நன்றி
அழகு அழகு உங்கள் கவிதை. அந்த ஓவியத்தை விட
கவிதை அழகாய் இருக்கிறது பாராட்டுக்கள்
கவிதையும் அதை முடித்த விதமும் ஓவியமும் அருமை..
மிக நேர்த்தியான பார்வை கொண்ட வரிகள் .. கொஞ்ச நேரம் வர்ணனைகளில் லயித்திருந்தேன் ...
ஆஹா..கவிதையுடன் அழகிய படத்தினையும் சேர்ந்து ரசித்தேன்.
அழகாக இருக்கிறது
கருத்துரையிடுக