ஞாயிறு, 18 ஜூலை, 2010
காலமாற்றம்
அன்றோ நீ
வருவோர் போவோர்க்கெல்லாம்
வலக்கரம் நீட்டினாய்.
மருதாணி சிவப்புபார்த்து
மகிழந்தவர் சொல்வர்
"அவருக்கு உன்மேல்
அவ்வளவு பாசமென்று".
இதைக் கேட்கவே நீ
மீண்டும் மீண்டும்
வருவோர் போவோர்கெல்லாம்
வலக்கரம் நீட்டினாய்.
இன்றோ
அயலூர் வந்திந்த
அடர் கட்டிடக்காட்டின்
அவசர வாழ்கையில்
உனக்கு
மருதாணி இடவும் நேரமில்லை
மனதோடு பேசவும் நேரமில்லை.
Labels:
கவிதை
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
Quote
Blog Archive
-
►
2011
(58)
- ► செப்டம்பர் (4)
14 comments:
//அவசர வாழ்கையில்
உனக்கு
மருதாணி இடவும் நேரமில்லை
மனதோடு பேசவும் நேரமில்லை//
பிரமாதமான வரிகள்.
அருமைங்க
இன்றோ
அயலூர் வந்திந்த
அடர் கட்டிடக்காட்டின்
அவசர வாழ்கையில்
உனக்கு
மருதாணி இடவும் நேரமில்லை
மனதோடு பேசவும் நேரமில்லை//
மிக யதார்த்தம்....
பாராட்டுக்கள்.
அவசர வாழ்கையில்
உனக்கு
மருதாணி இடவும் நேரமில்லை
மனதோடு பேசவும் நேரமில்லை//
இந்த வரி சூப்பர் தல
நல்ல வரிகள் நண்பரே. கட்டிடக் குவியல்களுக்கிடேயே நாம் இழந்துகொண்டு இருக்கும் விஷயங்கள் பல. வாழ்த்துக்கள்.
அருமையா இருக்கு
இழப்புகளைப் பட்டியலிட்டு மாளாது..
நல்லாருக்குங்க.
//மருதாணி இடவும் நேரமில்லை
மனதோடு பேசவும் நேரமில்லை.//
ஏக்க உணர்வுகளின் வெளிப்பாடாய் வந்த வரிகள் அழகு...
தமிழ் செய்திகள்,விளையாட்டு,சினிமா,பொழுதுபோக்கு
http://bit.ly/bJHGXf
என்ன செய்வது கிராமம் போலில்லை நகரம்...
உண்மையான வரிகள்.
அன்றோ நீ
வருவோர் போவோர்க்கெல்லாம்
வலக்கரம் நீட்டினாய்.
மருதாணி சிவப்புபார்த்து
மகிழந்தவர் சொல்வர்
"அவருக்கு உன்மேல்
அவ்வளவு பாசமென்று".
இதைக் கேட்கவே நீ
மீண்டும் மீண்டும்
வருவோர் போவோர்கெல்லாம்
வலக்கரம் நீட்டினாய்.
நல்ல வரிகள் வாழ்த்துக்கள்.
அடர் கட்டிடக்காடு!க்ரேட்.
நல்லாருக்குங்க
கருத்துரையிடுக