ஞாயிறு, 25 அக்டோபர், 2009

நீ

நான்
தேடிச்சுற்றிய
பத்தாம் கிரகம்
ஓடித்திரிந்த
ஒன்பதாம் திசை
பாடி மகிழ்ந்த
எட்டாம் ஸ்வரம்
கூடி ருசித்த
ஏழாம் சுவை
என் அணுவிலும் கலந்த
ஆறாம் பூதம்
ஆசையாய் நான் படித்த
ஐந்தாம் வேதம்
நல்லதையே சொல்லும்
நான்காம் காலம்
நல்வழி காட்டிய
மூன்றாம் விழி
என்னை வளர்த்த
இரண்டம் தாய்
எல்லாம் ஆகிய
ஒரே மனைவி




6 comments:

Unknown சொன்னது…

நன்று .. நன்று ...

மதுரை சரவணன் சொன்னது…

ஆஆ...அற்புதம். வாழ்த்துக்கள்

Unknown சொன்னது…

நன்றி சரவணன்

goma சொன்னது…

மனைவிக்கு அருமையான விருது

goma சொன்னது…

என்றென்றும் தித்திக்கும் நான்காம் கனி...சேர்த்துக்கொள்ளுங்கள்

Unknown சொன்னது…

கோமா, வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

Quote

Followers