ஞாயிறு, 5 ஜூன், 2011

பாபா ராம்தேவ் நள்ளிரவில் அப்புறப்படுத்தப்பட்டார்


கறுப்புப் பணம் மற்றும் ஊழலுக்கு எதிரான உண்ணாவிரதத்தை நேற்று துவங்கிய யோகா குரு பாபா ராம்தேவ் நேற்று நள்ளிரவே ராம்லீலா  கார்டனில் இருந்து அப்புறப்படுத்தப்பட்டார். சுமார் ஒரு மணியளவில் உண்ணாவிரத மேடையில் தூங்கிக் கொண்டிருந்த ராம்தேவை எழுப்பி அவரை வேறு இடத்திற்குக் கொண்டுசெல்லப் போவதாக போலீசார் சொன்னதும், யாரும் வன்முறையில் ஈடுபடவேண்டாம் என்று மைக்கில் சொல்லிவிட்டு மேடையில் இருந்து குதித்து கூட்டத்துக்குள் புகுந்தார் ராம்தேவ்.

கூட்டத்தின் நடுவிலும் இதையே சொன்ன ராம்தேவ் மீண்டும் மேடைக்கு வந்ததும் அவரின் ஆதரவாளர்கள் அவரைச் சுற்றி மனிதச் சங்கிலி அமைத்தார்கள். கற்களையும் தீயணைப்புக் கருவிகளையும் கொண்டு ஆதரவாளர்கள் போலீசாரைத் தாக்க முயன்றனர். நிலமை மோசமடைவதை உணர்ந்த போலீசார் கண்ணீர்புகைக் குண்டுகளை வீசியும் தடியடி நடத்தியும் கூட்டத்தைக் கலைத்தனர். பாபா ராம்தேவ் கைது செய்யப்படவில்லை வேறு இடத்திற்கு மாற்றப் பட்டிருக்கிறார் என்று போலிஸ் தரப்பில் சொல்லப்படுகிறது. ஹரித்துவார் அழைத்துச் செல்லப்பட்டிருக்கலாம் என்றும் யூகங்கள் உலவினாலும் அவர் எங்கிருக்கிறார் என்ற அதிகாப்பூர்வ தகவல் வெளியாகவில்லை.

இச்சம்பவத்தில் போலிசாரின் தடியடியில் காயமடைந்த சும்மார் முப்பதுபேர் அருகிலுள்ள லோக் நாயக் ஜெய்ப்ரகாஷ் (LNJP) மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளனர். இந்நிலையில் பாபா ராம்தேவின் பக்தைகள் சுமார் இருபத்தைந்து பேர் மூத்த போலீஸ் அதிகாரியான கூடுதல் DCP டி கே குப்தாவைச் சூழ்ந்தனர். சீருடையைக் கிழிக்க முயன்ற அவர்களிடம் சில மெடல்களை இழந்து தப்பினார் DCP.


கடந்த ஒரு வார காலமாகவே ராம்லீலா கார்டனில் உண்ணாவிரதத்திற்கென  சுமார் பதினெட்டு கோடி செலவில் தடபுடலான ஏற்பாடுகள் நடைபெற்றன. இரண்டரை லட்சம் சதுரடிக்கு சுமார் முப்பது அடி உயர நீர்புகா குடில்கள், 780 மின்விசிறிகள், 100 கூலர்கள், 7 பெருந்திரைத் தொலைக்காட்சிகள், 100 CCTV காமராக்கள் இதில் அடங்கும். இந்த மைதானத்தின் வாடகை மட்டுமே சுமார் மூன்று லட்சம். அது மட்டுமன்றி சுமார் 500 குடிநீர்க் கலன்கள் (ஒவ்வொன்றும் பதினாறு லட்சம் ரூபாய்கள்) மற்றும் 1300 கழிவறைகள், ஆம்புலன்ஸ் ஏற்பாடுகள், ஆளுயர பேனர்கள் என களை கட்டியது ராம்லீலா மைதானம்.


அரசும் உண்ணாவிரதத்தைத் தடுக்க தம்மாலான ஏற்பாடுகளைச் செய்து வந்தது. போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்ததுமே பிரதமர் மன்மோகன்சிங்  ராம்தேவிற்கு கடிதம் எழுதினார். அதில் ராம்தேவின் யோசனைகளை அரசு வரவேற்பதாகவும், அவருடன் இணைந்து ஆவன செய்வதாகவும், போராட்டத்தைக் கைவிடவேண்டுமென்றும் எழுதினார். அதை ராம்தேவ் ஏற்காததால் கட்சியின் மூத்தத் தலைவர்களை அவசராமாகக் கூட்டி ஆலோசித்தார் பிரதமர். உண்ணாவிரதப் போராட்டத்தை நிறுத்தும் பொறுப்பு நிதித்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜியிடம் கொடுக்கப்பட்டது.

புதன் மாலை ராம்தேவ் தில்லி வருவதை அறிந்ததும் அவரை வரவேற்க மூன்று மத்திய அமைச்சர்கள் அனுப்பப்பட்டனர். மனித வளத்துறை அமைச்சர் கபில் சிபில், பாராளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பவன் குமார் பன்சால், சுற்றுலாத் துறை அமைச்சர் சுபோத் காந்த் சகாயுடன் அமைச்சரவைச் செயலர் கே.எம்.சந்திரசேகரும் இந்திராகாந்தி விமான நிலையத்தில் பாபா ராம்தேவைக் காத்திருந்து வரவேற்றனர். அந்தப் பேச்சுவார்த்தையும் பயனளிக்காததால் பிரணாப் முகர்ஜி மீண்டும் பேசினார். அதன் பிறகும் ராம்தேவ் உண்ணாவிரதப் போராட்டத்தில் உறுதியாக இருந்தார்.


அன்னா ஹசாரேவும் தனது ஆதரவைத் தெரிவித்ததோடு இன்று உண்ணாவிரத மேடைக்கு வருவதாக அறிவித்திருந்தார். சுமார் 32 லட்சம் பேர் தங்களை இந்தப் போராட்டத்திற்குப் பதிவு செய்திருப்பதாக தகவல் வெளியானதும் அரசு தரப்பில் இருந்து கறுப்புப் பணத்திற்கு எதிராக சட்டம் செய்யக் குழு அமைக்கப்ப் போவதாக உறுதிமொழியுடன் ராம்தேவிற்கு நேற்றிரவு கடிதம் அனுப்பப்பட்டது. கறுப்புப் பணத்தை நாட்டுடைமையாக்குதல், ஊழல் செய்வோருக்கு கடுமையான தண்டனை இந்த இரண்டைத் தவிர ராம்தேவின் 99 சதவீதக் கோரிக்கைகளை அரசு ஏற்பதாகச் சொல்லப்பட்டது. ஆகவே உண்ணாவிரதத்தை முடித்துவிட்டு தில்லியில் இருந்து வெளியேறுமாறும் அரசு தரப்பில் இருந்து அறிவுறுத்தப்பட்டது. அதையும் ஏற்காத ராம்தேவ், தனது கோரிக்கைகள் முழுவதும் ஏற்றுக்கொள்ளப்படும் வரை போராட்டம் தொடரும் என உறுதியாக இருந்ததால் அரசு தரப்பில் இருந்து இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

6 comments:

எல் கே சொன்னது…

இது அநியாயம்

வை.கோபாலகிருஷ்ணன் சொன்னது…

அவ்ர் எங்கிருக்கிறார் என்பதை அதிகாரபூர்வமாக தெரிவிக்கவில்லை என்றால் என்ன அர்த்தம்? ஜனநாயக முறையில் உண்ணாவிரதம் இருப்பதை தடுப்பதிலிருந்தே ஏதோ உள் அர்த்தம் இருப்பதாகத்தானே நினைக்க முடிகிறது?
இனி என்னென்ன் ந்ட்க்க்ப்போகிறதோ பார்ப்போம்.

rajamelaiyur சொன்னது…

Its not a Congress government . . Its a hitlar goverment

rajamelaiyur சொன்னது…

I am a new visitor of your blog . . Your blog is very super

சிவகுமாரன் சொன்னது…

இவ்வளவு பணம் செலவழித்து உண்ணாவிரதம் இருக்க வேண்டுமா? பின்னணியில் பி.ஜே.பி இருப்பது உண்மைதானா?

இராஜராஜேஸ்வரி சொன்னது…

@"பாபா ராம்தேவ் நள்ளிரவில் அப்புறப்படுத்தப்பட்டார்"//
அராஜகமாக இருக்கிறது.

Quote

Blog Archive

Followers