ஞாயிறு, 14 நவம்பர், 2010

மூன்றாம் தாய்

திங்களன் றுதித்த
திங்கள் - நீயெங்கள்
வாழ்வின் சர்க்கரைப்
பொங்கல்.

குடும்பத்திற்குக் கிடைத்த
குலதெய்வ அருள்.
"குழலினிது" குறளுக்கு
அருஞ்சொற் பொருள்.

பசுந்தளிரே  உன்சிரிப்பில்
பயணக் களைப்பும்
பணிச்சுமை அலுப்பும்
பறந்தோடிப் போகிறது.

முன்பெலாம்
என்னவள் கதைசொல்லி
உனை தூங்கவைத்தாள்.
இப்போதெலாம்
நீ கதைசொல்லி
எனை தூங்க வைக்கிறாய்
ஆதலில் நீயென்
மூன்றாம் தாய்.

22 comments:

சேலம் தேவா சொன்னது…

அருமையான கவிதைன்ணே..!! கலக்குங்க..!!

எல் கே சொன்னது…

குழந்தைகள் தின சிறப்பு கவிதையா ?? வாழ்த்துக்கள்

வெங்கட் நாகராஜ் சொன்னது…

குழந்தைகள் தினத்தில் குட்டிச் செல்லம் தியானாவுக்கான கவிதை சூப்பர் நண்பரே.

சௌந்தர் சொன்னது…

ஆதலில் நீயென்
மூன்றாம் தாய்.////

இந்த வரிகள் ரொம்ப நல்லா இருக்கு குழந்தைகள் தின வாழ்த்துக்கள்

அன்புடன் அருணா சொன்னது…

Nice!

ஜெயந்த் கிருஷ்ணா சொன்னது…

அருமையான கவிதை

அன்பரசன் சொன்னது…

கவிதை சூப்பர்.
குழந்தைகள் தின வாழ்த்துக்கள்

'பரிவை' சே.குமார் சொன்னது…

அருமையான கவிதை... குழந்தைகள் தின வாழ்த்துக்கள்.

ADHI VENKAT சொன்னது…

இனிமையாக உள்ளது.

பெயரில்லா சொன்னது…

குழந்தைகளை கொஞ்சும் போது நாமே குழந்தைகளாகி விடுகின்றோம்..குழந்தைகல் தின வாழ்த்துக்கள்..

Unknown சொன்னது…

சேலம் தேவா
LK
வெங்கட் நாகராஜ்
சௌந்தர்
அன்புடன் அருணா
வெறும்பய
அன்பரசன்
சே.குமார்
கோவை2தில்லி
தமிழரசி

அனைவருக்கும் குழந்தைகள் தின வாழ்த்துக்கள் & மிக்க நன்றி.

ஸாதிகா சொன்னது…

கலக்கல் கவிதை.

Unknown சொன்னது…

கவிதை நல்லாருக்கு நேசன்..

பெயரில்லா சொன்னது…

குட்டிச் செல்லம் தியானாவுக்கு & அனைவருக்கும் குழந்தைகள் தின வாழ்த்துக்கள்!!

அன்புடன்
Sai Gokulakrishna & Jr.Komathi Gokulakrishna

எம்.ஏ.சுசீலா சொன்னது…

உங்கள் மழலைக்கு எனது அன்பான குழந்தைகள்தின நல்வாழ்த்துக்கள்.

ஹேமா சொன்னது…

மூன்றாம் தாயானாள் உங்கள் குழந்தை உங்களுக்கே.அருமை.குழந்தைக்கும் உங்களுக்கும் வாழ்த்துகள் !

விக்னேஷ்வரி சொன்னது…

லவ்லி.

pichaikaaran சொன்னது…

அருமையான கவிதை

அமுதா கிருஷ்ணா சொன்னது…

பெண் குழந்தையினை தாயுடன் ஒப்பிட்டு கலக்கல்...

செல்வா சொன்னது…

//பசுந்தளிரே உன்சிரிப்பில்
பயணக் களைப்பும்
பணிச்சுமை அலுப்பும்
பறந்தோடிப் போகிறது.//

அருமையா இருக்குங்க ., குழந்தைகள் என்றால் எப்பொழுதுமே இனிமை தான் .!!

சைவகொத்துப்பரோட்டா சொன்னது…

குட்டீசுக்கான கவிதை கியூட்டா இருக்கு!

Priya சொன்னது…

அருமையான கவிதை!

Quote

Followers