ஞாயிறு, 27 ஜூன், 2010

எனக்கே எனக்காய்...

இரண்டாயிரமாம் ஆண்டு. ஏப்ரலில் ஒருநாள். சூரிய வாத்தியார் பகலைச் சொல்லிக்கொடுத்து போனபின்பு பூமி தன் இரவு வகுப்பெடுக்கும் நிலவு டீச்சருக்காய் காத்திருந்த முன்னிரவு. அப்போது நான் உதகையில் உள்ள ஒரு மருந்தாக்கியல் கல்லூரி மாணவன். ரோட்டரேக்ட் க்ளபின் சந்திப்பிற்காக நாங்கள் உதகையில் உள்ள ஓர் உய்தர விடுதியொன்றில் குழுமியிருந்தோம். (Hotel Monarch)

வைரமுத்துவும் அங்கு வந்திருப்பதாக காற்றில் கசிந்த செய்தி கேட்டு அறை எண் விசாரித்தோம். அந்த புத்திசாலி வரவேற்பாளர்(!) அறை என்னைச் சொல்லிவிட்டு அனுமதி இல்லை என்றாள். நானும் நண்பர்கள் இருவரும் திருட்டுத்தனமாய் மேலே வந்து அறைக்கதவைத் தட்டினோம்.

ஒல்லியாய்  ஓர் உருவம் கதவைத் திறந்தது. நாங்கள் இங்குள்ள மருந்தாக்கியல் கல்லூரி மாணவர்கள். திரு வைரமுத்துவை சந்திக்க வேண்டுமேன்றோம். வாருங்கள் உள்ளே என்றார். அறையில் மொத்தம் மூவர் இருந்தனர். பார்த்தவுடன் தெரித்தது அங்கோர் பாடல் உருவாகிக் கொண்டிருப்பது.

படபடப்பு, பிரமிப்பு, உற்சாகம் என எல்லாம் சேர்ந்த ஒரு கலவை என்னை உந்தித் தள்ளியது. நான் வைரமுத்துவின் காலில் விழுந்து ஆசி வாங்கினேன். நண்பர்கள் இருவரும் அப்படியே செய்தனர். பின் வைரமுத்து அங்கிருந்த இருவரையும் அறிமுகப் படுத்தினார். இவர் (கதவைத் திறந்தவர்) கண்ணெதிரே தோன்றினாள் என்ற வெற்றிப் பட இயக்குனர் ரவிச்சந்திரன். இவர் இளம் இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் என்றார்.

சில நிமிட உரையாடளுக்குப்பின் எங்களுக்கு உரைத்தது கையெழுத்து வாங்கக்கூட எங்களிடம் காகிதம் இல்லையென்று. உடனே வைரமுத்து தான் பாட்டெழுதிக் கொண்டிருந்த தாளுக்கு அடுத்த தாளில் மூவருக்கும் சேர்த்து மூன்று கையொப்பமிட்டுக் கொடுத்தார்.

அறைக்கு வைத்தும் முதல் வேலையாய் அத்தாளை மின்விளக்கின் மிக அருகில் வைத்து பாட்டிற்காய் எழுதிய வரி பதிந்துள்ளதா என பார்த்தேன். உற்று நோக்கி ஒவ்வொரு எழுத்தாய் கோர்த்தபின் என்னுள் உற்சாகம் கரைபுரண்டது. வைரமுத்துவின் வரிகள் இசையோடு சேர்ந்து உலகறியும் முன்னர் எனக்கே என்னகெனக் குதித்தேன்.
அதிலிருந்த வரிகள்

" இருக்கும் கவிஞர்கள்
 இம்சை போதும்
 என்னையும் கவிஞன் ஆக்காதே...."
(பாடல்: குல்மொகர் மலரே..., படம்: மஜ்னு )

பின்பந்த ஒற்றைத் தாளை மூன்றாக்கிப் பங்கிட்டுக் கொண்டோம். இதோ என்பங்கு கீழே....

7 comments:

Unknown சொன்னது…

நீங்க நல்ல ரசிகன்

Swengnr சொன்னது…

நல்ல பகிர்வு! நன்றி!

அன்புடன் நான் சொன்னது…

ஒரு வியக்கும் தருணம் அது...
பகிர்வுக்கு நன்றி.

ஹேமா சொன்னது…

உங்கள் அளவிடமுடியாச் சந்தோஷத்தைப் பகிர்ந்துகொண்டீர்கள்.நன்றி.

மதுரை சரவணன் சொன்னது…

பகிர்வுக்கு நன்றி. வாழ்த்துக்கள்

Chitra சொன்னது…

Thats nice! :-)

Unknown சொன்னது…

பின்னூட்டமிட்ட மற்றும் வாக்களித்த அனைவருக்கும் நன்றிகள்

Quote

Followers