ஞாயிறு, 8 ஜனவரி, 2017

நதிக்கரை ஞாபகங்கள்


மணல்மெத்தை ஆடிய
செருப்பில்லாக் கால்கள்
வெருந்தரை தொடுதலே
அரிதாகிப் போனது.

பச்சைப் புல்வெளி
பருகிய கண்கள்
சாலைகளின் சந்திப்பில்
பச்சைக் கலைகிறது.

குவித்தமணலில் குச்சியொளித்து
கிச்சுக்கிச்சுத் தாம்பூலம்
ஆடிய விரல்களின்று
மிட்டாய்க் கரடிகளை தேடுகிறது.

அட்டைப் பூச்சிகளை
ரயிலென ரசித்தவன்
ரயில்களைப்  பூச்சிகளாக்கி
அடிக்கடிப் பறக்கிறேன்.

ஆனாலும்
இக்கட்டடக்காட்டில்
என் கையிலாடும்
தொடுதிரை நாணல்வழி
எட்டிப் பார்க்கிறது
நதிக்ரை ஞாபகங்கள்!

1 comments:

G.M Balasubramaniam சொன்னது…

நினைத்துப்பார்த்தால் வரும் ஆயிரம் ஞாபகங்கள்

Quote

Followers