அடுத்த வீட்டுப் பாட்டியிடம்
அவள் கணவன் பெயர்கேட்டால்
'ஏழுமலை' என்று சொல்லாமல்
வாரத்து நாட்களோட
மாலைக்கு கால் ஒடிச்சு
மனசுக்குள் சொல்லு ராசா
மன்னவரு பேர் கிடைக்கும்னு
ஏதோதோ புதிர் சொல்வாள்.
என்னவள் பெயர்
என்னவென்று கேட்டநண்பா
பாட்டியிடம் ஸ்டைல் வாங்கி
பால்நிலவின் பெயர் சொன்னேன்
படித்துப் பார்த்து
பதில் சொல் பார்ப்போம்.
கஜினி ராசா
பதினேழாம் முறை
படையெடுத்து வந்தப்போ
கொள்ளையடிச்ச கோவில்பேரில்
முதலிரண்டு லிபிஎடுத்து
கிலோ ஆட்டின்
இரு கொம்பொடித்தால்
கிடைக்கின்ற பெயரைச்சேர்
நான்விரும்பும் தேவதையின்
நாலெழுத்து பெயர்கிடைக்கும்.
(கண்டுபுடிங்க பார்க்கலாம் )
ஞாயிறு, 20 டிசம்பர், 2009
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
Quote
Blog Archive
-
►
2011
(58)
- ► செப்டம்பர் (4)
-
►
2010
(47)
- ► செப்டம்பர் (5)