நண்பர் LK தனது கவிச்சோலை வலைப்பூவில் ஒரு கவிதைப்போட்டி அறிவித்திருக்கிறார். கீழுள்ள முத்தொள்ளாயிரப் பாடலுக்கு புதுக்கவிதை எழுதுவது தான் போட்டி.
பாடல்
வீறுசால் மன்னர் விரிதாம வெண்குடையைப்
பாற எறிந்த பரிசயத்தால்-தேறாது
செங்கண்மாக் கோதை சினவெங் களியானை
திங்கள்மேல் நீட்டுந்தன் கை.
கவிதை 1
வீரனாம் சேரனை
வெல்லவரும் பகைவர்தேரை
வீதியில் சாய்ப்பதும்
வெறிகொண்டு மிதிப்பதுமே
வேலையெனக் கொண்டதோர்
வெற்றி யானை.
விண்ணிலே மின்னிய
வெண்ணிலா கண்டதும்
அங்கோர் தேர்க்குடை
அசைகிறதே என்றெண்ணி
தும்பிக்கை நீட்டியே
துடைத்தெரியப் பார்த்ததாம்!
இது போட்டிக்கான என் கவிதை நீங்களும் எழுத வேண்டுமா?
மேலதிக விவரங்களுக்கு இங்கே செல்லவும்....
வீறுசால் மன்னர் விரிதாம வெண்குடையைப்
பாற எறிந்த பரிசயத்தால்-தேறாது
செங்கண்மாக் கோதை சினவெங் களியானை
திங்கள்மேல் நீட்டுந்தன் கை.
கவிதை 1
வீரனாம் சேரனை
வெல்லவரும் பகைவர்தேரை
வீதியில் சாய்ப்பதும்
வெறிகொண்டு மிதிப்பதுமே
வேலையெனக் கொண்டதோர்
வெற்றி யானை.
விண்ணிலே மின்னிய
வெண்ணிலா கண்டதும்
அங்கோர் தேர்க்குடை
அசைகிறதே என்றெண்ணி
தும்பிக்கை நீட்டியே
துடைத்தெரியப் பார்த்ததாம்!
இது போட்டிக்கான என் கவிதை நீங்களும் எழுத வேண்டுமா?
மேலதிக விவரங்களுக்கு இங்கே செல்லவும்....
கவிதை 2
வீரம் செறிந்த சேரமன்னனை
அம்பாரியில் அமர்த்தியே
வீறுநடை போடும் வெற்றி
வேழத்தின் துதிக்கைக்கு
செற்றார்தம் தேரினையும்,
வெண்கொற்றக் குடையினையும்
வீழ்த்துவதே வழக்கம்...
வழக்கமான பழக்கத்தினால்
வான்மதியும் வேற்றரசன்
தேர்க்குடையாய்த் தெரிந்திட
அக்கணமே அம்புலியைத்
துவம்சம் செய்திட - தம்
துதிக்கையைச் சுழற்றியதே
சூறாவளியாய்..!