நேற்றிரவு
ஏழரை மணியில் இருந்து ஏழே
முக்காலுக்குள் மகாராஷ்டிர மாநிலம் புனே நகரில்
ஒரு கிலோ மீட்டர் சுற்றளவில்
நான்கு இடங்களில் அடுத்தடுத்து குண்டுகள் வெடித்தன. முதல் குண்டு மக்கள்
நடமாட்டம் மிகுந்த J M சாலையில் உள்ள பாலகந்தர்வ் தியேட்டர்
அருகில் வெடித்தது. நேற்று மத்திய
உள்துறை அமைச்சராகப் பொறுப்பேற்றுக்கொண்ட முன்னாள் மின்துறை மத்திய அமைச்சர் சுஷில்
குமார் ஷிண்டே ஒரு விருது
வழங்கும் விழாவிற்காக இங்கு வரவிருந்தது குறிப்பிடத்தக்கது.
இரண்டாவது
குண்டு மெக் டொனால்ட்ஸ் கடையின்
குப்பைத்தொட்டியிலும் மூன்றாவது தேனா வங்கியின் கிளையருகிலும்
நான்காவது கர்வரே பாலம் அருகிலும்
வெடித்தது. இந்த குண்டு வெடிப்பில்
இருவர் காயமடைந்தனர். உயிரிழப்பு ஏதுமில்லை. இந்த குண்டுகள் அனைத்தும்
குறைந்த சக்தி கொண்ட பென்சில்-செல் டெட்டனேட்டர்களால் செய்யப்பட்டவை.
ஐந்தாவது குண்டு செயலிழக்கப் பட்டது.
இரண்டு
ஆண்டுகளுக்கு முன் பதினேழு உயிர்களை
காவு வாங்கிய ஜெர்மன் பேக்கரி
குண்டு வெடிப்புச் சம்பவமும் இதே புனே நகரில்
நடந்தது நினைவுகொள்ளத்தக்கது.
0 comments:
கருத்துரையிடுக