வெள்ளி, 19 நவம்பர், 2010
கானல் நேசம்
காதற்கணவா
நான் கொண்ட
காதல் கனவா.....
அரிதாய்ச் சந்தித்து
அன்பைப் பகிர்கையில்
குறிஞ்சியாய் மலர்ந்தது
நெருங்கி வந்து
நேசம் வளர்க்கையில்
ஆனதேன் நெருஞ்சியாய்...
தாலிகட்டிய புண்ணியத்திற்காய்
தாம்பத்யம் நடத்துகிறாய் - உறவு
வேலிவிட்டு வெளியேறி
வேடிக்கைப் பார்க்கின்றாய்.
உன்னிடம் வேண்டுவது
புன்னகைக்குப் புன்னகையல்ல
அழுகையில் ஆறுதல்.
கீறலைக் கவனித்து
விரைவில் சரிசெய்தால்
விரிசல் என்பதற்கு
வேலை இருக்காது.
கடந்ததை மறந்திடுவோம்
காதல்சொல் மறுமுறை.
கடைத்தெரு செல்கையிலும்
கைகோர்த்து நட...
கைப்பேசித் திரையில் - இந்தக்
காதலியின் படம்வை
பொய்ப்பேசித் தவிர்க்காமல்
புதுப்படம் கூட்டிசெல்....
உற்று நோக்கு
உள்ளுணர் வுணர்
உனைப்பற்றி நான்
எண்ணுவது பிழையென
எண்ணும்படிச் செய்.
வாழ்க்கைச் செடிக்கு
காதல் நீர்தெளிப்போம் - பின்
வளரும் அது
வசந்தகால விருட்சமாய்.
இப்படி
உள்ளத்து ஆசையோ
காதல் தேசம்
உண்மையில் கிடைத்ததோ
கானல் நேசம்.
காதற்கணவா
நீயே சொல்.
நான் கொண்ட
காதல் கனவா.......
Labels:
கவிதை
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
Quote
Blog Archive
-
►
2011
(58)
- ► செப்டம்பர் (4)
-
▼
2010
(47)
- ► செப்டம்பர் (5)
27 comments:
A marriage became mirage.
வாழ்க்கைச் செடிக்கு
காதல் நீர்தெளிப்போம் - பின்
வளரும் அது
வசந்தகால விருட்சமாய்.
ஆஹா வளரட்டும் வளரட்டும்
வசந்தகாலம் உங்கள் வாழ்வில் வீசட்டும்!!!
இப்படி
உள்ளத்து ஆசையோ
காதல் தேசம்
உண்மையில் கிடைத்ததோ
கானல் நேசம்.
ஏன் அப்படி நினைக்கறீங்க கலா நேசன்??
வெகு அழகு. வாழ்த்துக்கள்.
@ sakthi : உங்கள் பாசத்திற்கு நன்றி. இது கற்பனைக் கவிதைங்க....
@ கோவை2தில்லி : நன்றி
நல்லா இருக்குங்க.
வார்த்தை ஜாலங்களுடன் கூடிய அருமையான கவிதை!
@ அன்பரசன் : நன்றி
@ மனோ சாமிநாதன் :நன்றி
உண்மையான அருமையான வரிகள் . நான் நடை முறை வாழ்க்கையில் அனுபவிக்கும் வலிகள் .
வாழ்த்துக்கள்
..இப்படி
உள்ளத்து ஆசையோ
காதல் தேசம்
உண்மையில் கிடைத்ததோ
கானல் நேசம்....
வரிகள் அருமை...
சிறந்த கவிதைகளை தேர்ந்தெடுத்து படியுங்கள். உங்களிடம் நல்ல கவிதைகளுக்குகான வித்து இருக்கின்றது
நல்ல கவிதை. பகிர்வுக்கு நன்றி.
//உன்னிடம் வேண்டுவது
புன்னகைக்குப் புன்னகையல்ல
அழுகையில் ஆறுதல்.// அருமைங்க...
கனவா.. இல்லை காற்றா...
/உன்னிடம் வேண்டுவது
புன்னகைக்குப் புன்னகையல்ல
அழுகையில் ஆறுதல். //
செம செம .,
//கைப்பேசித் திரையில் - இந்தக்
காதலியின் படம்வை
பொய்ப்பேசித் தவிர்க்காமல்
புதுப்படம் கூட்டிசெல்....//
இந்த வரிகளும் கலக்கலா இருக்குங்க .
//தாலிகட்டிய புண்ணியத்திற்காய்
தாம்பத்யம் நடத்துகிறாய் - உறவு
வேலிவிட்டு வெளியேறி
வேடிக்கைப் பார்க்கின்றாய்//
nalla iruku ... romba.... realitya thotu solreenga
உன்னிடம் வேண்டுவது
புன்னகைக்குப் புன்னகையல்ல
அழுகையில் ஆறுதல்.
nalla varigal
polurdhayanithi
கலக்கலா இருக்குங்க.
வரிகள் அருமை....வாழ்த்துக்கள்!
//உற்று நோக்கு
உள்ளுணர் வுணர்
உனைப்பற்றி நான்
எண்ணுவது பிழையென
எண்ணும்படிச் செய்.//
கவிதை அழகு... வாழ்த்துக்கள்
எனக்கேனோ அழற கவிதைகள் பிடிக்க மாட்டேங்குதே ஏன்?
நல்லா இருக்கு. அருமை.
வார்த்தைகளின் விளையாட்டை ரசித்தேன் கலாநேசன்!
@ vittalankavithaigal : வாழ்வின் இப்போதைய கஷ்டங்கள் நிச்சயம் மாறும். ஒளிமயமான எதிர்காலம் உங்கள் கைகளில்....
@ சங்கவி : நன்றி
@ உயிரோடை :மிக்க நன்றி. நிச்சயம் படிக்கிறேன்.
@ வெங்கட் நாகராஜ் : நன்றி
@ Jayaseelan : நன்றி
@ கே.ஆர்.பி.செந்தில் : ஆமாண்ணே அதேதான்.
@ ப.செல்வக்குமார் : நன்றி
@ "தாரிஸன் : நன்றி
@ polurdhayanithi : நன்றி
@ சே.குமார் : நன்றி
@ Priya : நன்றி
@ மதுரை சரவணன் : நன்றி
@ விக்னேஷ்வரி : நீங்க வாங்கிவந்த வரம் அப்படி...
@ vanathy : நன்றி
@ ஹேமா : நன்றி
இறுதி வரியில் சொல்லாட்சி அபாரம்
கருத்துரையிடுக