ஞாயிறு, 25 டிசம்பர், 2011
ஞாயிறு, 18 டிசம்பர், 2011
உங்களுக்குக் கொலைவெறி பிடிச்சிருக்கா?
வலை நட்புகளுக்கு வணக்கம். நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி.
வொய் திஸ் கொலவெறி கொலவெறி கொலவெறிடி? என்ற தனுஷின் பாடல் தான் இப்போது உலகம் முழுவதும் ஹிட். பாடல் யு டியூபில் வெளியான ஒரு மாதத்தில் சுமார் இரண்டரை கோடி ஹிட்ஸ் பெற்றுள்ளது. (இன்று காலை ஏழு மணியளவில் 24531657 ஹிட்ஸ். இதைப் பதிவிடும் நான்கு மணியளவில் 24,722,004 ஹிட்ஸ்). சுமார் எழுபதாயிரத்துக்கும் அதிகமானோர் முகப்புத்தகத்தில் இந்தப் பாடலைப் பகிர்ந்துள்ளனர். BBC செய்திகளில் இப்பாடலைப் பற்றி செய்தி வெளியிட்டதோடு BBC ரேடியோவில் இப்பாடலையும் ஒலிபரப்பினார்கள். அமெரிக்காவின் TIME இதழில் இப்பாடலைப் பற்றி எழுதுகிறார்கள். (Nonsensical, Semi-English Music Video Goes Viral in India. The song's lyrics are practically gibberish, but India can't stop listening.). வட இந்திய செய்தித் தொலைக்காட்சிகளில் முதல் முறையாக ஒரு தமிழ் சினிமாப் பாடலை விளம்பரப் படுத்துவதோடு "கொலைவெறிக்கு" அருஞ்சொற்பொருள் சொல்லி அசத்துகிறார்கள். அதெல்லாம் விடுங்க... சுமார் இரண்டு மாதங்களாய் பதிவேதும் எழுதாத நான் கடந்த இரண்டு வாரங்களாய் இப்பாடலைப் பற்றியோர் பதிவெழுத முயற்சி செய்துகொண்டிருந்தேன். அப்படி என்னதான் இருக்கிறது இந்தப்பாட்டில்...
இணையதளத்தில் வைரஸாய் இப்பாடல் பரவ தனுஷ் சொல்லும் காரணங்கள் என்ன?
- அதிஷ்டம்.
- பாட்டில் கொலைவெறியைத் தவிர வேறெங்கும் தமிழ் இல்லை. அதனால் வழக்கமான தமிழ்ப் பாடல்களுக்கான மொழித்தடை இதிலில்லை.
- Its funny !
- எளிமையான பாடல். யார் வேண்டுமானாலும் பாடலாம்.
- பாடலின் சூழல். அதாவது பொண்ணுங்களால ஏமாறும் பசங்களின் பாடல். அதாவது ஒவ்வொரு பையனுக்கும் இந்தப் பாட்டோடு தொடர்பிருக்கு. (அப்போ உங்களையும் பொண்ணுங்க ஏமாத்தி இருக்காங்களா என்ற உடனடி கேள்விக்கு, "ஆமாம் ஒருமுறை" என்பது தனுஷின் பதில்.
கேட்டவுடன் நெஞ்சில் ஒட்டிக்கொள்ளும் மெட்டாக இருந்த போதும் இது இந்த அளவுக்கு ஹிட்டாக அதிஷ்டத்தையும் சேர்த்து அமிதாப் பச்சன், சோனி வீடியோ, ரஜினி என இன்னும் சில காரணங்கள் இருக்கின்றன.
அமிதாப் பச்சன்: பாடல் வெளியான முதல் வாரத்திலேயே அமிதாப் அதைப் பற்றி ட்விட்டரில் எழுதினார். ("Just heard #Kolaveri after much talk on it ... its so original and catchy ..congrats Dhanush and Aishwarya(Rajni's daughter) .. love").("how cool is Kolaveri di!!! slamming it LOUD! well done Dhanush and Aishwarya. big up guys!"). மேலும் அதைப் பற்றியோர் பேட்டியிலும் குறிப்பிட்டார். இது வட இந்தியர்கள் இப்பாடலைக் கவனிக்க உதவியது. (எங்கள் அலுவலகத்தில் சிலர் அமிதாப் பச்சனுக்குப் பிடித்தது என்பதாலேயே கைப்பேசியின் காலர் டியூனாக வைத்திருக்கிறார்கள்.)
தில்லியிலும் நான் செல்லும் இடங்களிலெல்லாம் இப்பாடலைக் கேட்க முடிகிறது. நேற்று எங்கள் அலுவலக பிக்னிக்கிலும் இசைக்கப்பட்ட முதல் பாடல் இதுதான். இப்படி அங்கிங்கெனாதபடி எங்கும் பரவியுள்ள இந்தப் பாட்டை உங்களுக்குப் பிடிக்கவில்லையா...
சிறுவன் நவீன் (பாடகர் சோனு நிகத்தின் மகன்) பாடுவதைக் கேளுங்கள் உங்களுக்கு மிகப்பிடிக்கும். இது டாப் சாங்கோ, பாப் சாங்கோ இல்லை. ஆனால் சூப் சாங். சூப்பர் சாங்.....வாழ்த்துக்கள் அனிருத்.
Labels:
செய்திகள்
சனி, 12 நவம்பர், 2011
புகைப்பிடிக்க புதிய விதிகள்
இந்திய சுகாதரத்துறை அமைச்சகம் அண்மையில் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி நிகழ்சிகளில் புகைப்பிடிக்கும் காட்சிகளுக்கென புதிய விதிமுறைகளை வெளியிட்டுள்ளது. இந்த விதிமுறைகள் வரும் திங்கட்கிழமை (14 - 11 - 2011 ) முதல் படமாக்கப்படும் அனைத்துக் காட்சிகளுக்கும் பொருந்தும்.
- வழக்கமாக புகைப்பிடிக்கும் காட்சிகளில் திரையின் கீழ் "புகைப்பிடித்தல் உடல்நலத்திற்கு கேடு" என்ற வரிகள் போடுவார்கள். அதனோடு சேர்த்து கதாநாயகனே புகைப்பிடித்தலின் தீங்கைப் பற்றி உங்களோடு குறைந்தது 20 நொடிகள் பேசுவார். இந்தக்காட்சி இருமுறை (படத்தின் துவக்கத்திலும் படத்தின் நடுவிலும்) காட்டப்படும். (நல்ல பஞ்ச் டயலாக் யோசிக்கலாம்!)
- புகைப்படத்தின் துவக்கத்திலும் நடுவிலும் குறைந்தது 30 நொடிகள் புகைப்ப்டிதலின் தீமையைப்பற்றிய விளம்பரம் காட்டப்படவேண்டும்.
- சிகரெட் மற்றும் புகையிலைப் பொருட்களின் கம்பெனிப் பெயர்கள் (Brand Name) காண்பிக்கக் கூடாது.
- தணிக்கைக் குழுவில் சுகாதாரத்துறையில் இருந்தும் ஒருவர் பங்கேற்பார். புகைப்பிடிக்கும் காட்சியின் அவசியத்தை விளக்கிச் சான்றிதல் பெற வேண்டும்.
புகைப் பழக்கம் நுரையீரலைப் பாதிக்கும் என்பதும் அதன்பின் நுரையீரல் புற்று நோய் வரும் என்பதும் அனைவரும் அறிந்ததே. நுரையீரல் புற்று நோயால் பாதிக்கப்பட்டு அதன் பின்னர் 5 வருடங்களுக்கு மேல் உயிர் வாழ்பவர்கள் வெறும் 14 சதவீதம் மட்டுமே (மற்ற புற்று நோய்களுக்கு சராசரியாக 52 சதவீதம்) என்பதை நினைவில் கொள்க.
புகைப்பழக்கத்தால் புற்றுநோய் வர நீங்கள் புகைப்பிடிக்கத்தேவையில்லை. புகைப்பிடிப்பவரின் நண்பனாகவோ மனைவியாகவோ குடும்பத்தில் ஒருவராகவோ புகைக்கும் போது அருகில் இருந்தாலே போதும். (Passive Smoking ).
வியாழன், 20 அக்டோபர், 2011
காதலால் கலக்கலாம் வா!
உன்னை
வருடும் காற்றைக்
கொஞ்சம் வரச்சொல்...
உன்
வாசம் எனக்குக்
கொஞ்சம் தரச்சொல்.
விண்மீன் தோழியிடம்
புன்னகையைக் கொடுத்தனுப்பு.
விரல்களின் வெம்மையை
இரவிடம் கொடுத்தனுப்பு.
இதழ்களின் குளுமையை
முகிலிடம் தந்தனுப்பு.
நினைவுகளை மெத்தையாக்கி
நிலவிடம் தந்தனுப்பு.
திகட்டாத அன்பைத்
தீந்தமிழிடம் சொல்லியனுப்பு.
என்
கற்பூரக் காதலை
அக்னியாய் அணைத்துக்கொள்.
கொஞ்சுதலில் குழந்தையாய்
கெஞ்சுதலில் இளமையாய்
நேசத்தில் தாய்மையாய்
முழுதாய் கிரகித்துக்கொள்.
கடலுக்குள் கலக்கும்
நதிபோல
காதலுக்குள் கலக்கலாம்
வா!
சனி, 15 அக்டோபர், 2011
உதயநிலா
இன்று வடக்கு மற்றும் வடகிழக்கு இந்தியாவில் கர்வா சவுத் (KARVA CHAUTH) கொண்டாடப்படுகிறது. திருமணமான இந்துப் பெண்கள் கணவனின் நீண்ட ஆயுள் வேண்டி நிலவு வரும் வரை விரதமிருப்பார்கள். நிலவு வந்ததும் அதை நீரிலோ, துப்பட்டா அல்லது சல்லடை வைத்தோ பார்த்து பின் கணவன் முகம் பார்ப்பார்கள். "கடவுளே என் கணவனுக்கு ஆரோக்யமான நீண்ட ஆயுள் கொடு, நான் சுமங்கலியாக (இவனைத் தனியே தவிக்கவிட்டுட்டு!) இறக்க வேண்டும்" என வேண்டிக்கொள்வார்கள்.
கர்வா என்றால் மண்கலசம். சௌத் (சௌதா) என்றால் நான்கு (அதாவது கார்த்திகை மாதத்தின் பௌர்ணமியில் இருந்து நான்காவது நாள்). மண் கலசத்தில் நீரையோ அல்லது பாலையோ நிரப்பி அதில் பஞ்ச ரத்தினங்களை இட்டு தானமாகக் கொடுத்து கணவனுக்காக கடவுளிடம் வேண்டிக்கொள்ளும் பண்டிகை என்று பொருள்.
அந்த காலத்தில் வெகு தொலைவில் வாக்கப்பட்டுப் போகும் பெண்கள், ஏதாவது பிரச்சனை என்றால் தங்கள் குடும்பத்தை உடனடியாகத் தொடர்பு கொள்ள இயலாது. அதனால் நாத்தனார் அல்லது அருகில் உள்ள குடும்பத்துப் பெண்களை சகோதரியாக ஏற்று பிரச்சனைகளை பேசிக்கொள்ளவும் ஒருவருக்கு ஒருவர் உறுதுணையாக இருக்கவும் இந்தப் பண்டிகை பழங்காலத்தில் கொண்டாடப்பட்டது. இன்றோ சாமியார் மடத்தில் பூனை கட்டிய கதையாய், மருதாணி இட்டு வளையல் போட்டு புடவை கட்டும் பண்டிகையாகிப் போனது கர்வா சௌத்.
கர்வா சௌத் அன்று சூரிய உதயத்தில் இருந்து நிலவு வரும் வரை தண்ணீர் கூட குடிக்காமல் பெண்கள் கணவனுக்காக விரதமிருக்கிறார்கள். முன்தினமே கை நிறைய வளையல் வாங்கிக்கொண்டு மருதாணி இட்டுக்கொள்கிறார்கள். அன்று பெரும்பாலும் முகூர்த்த புடவைகளை கட்டிக்கொண்டு தெருவில் உள்ள பெண்களெல்லாம் ஒன்றாய் கூடி பூஜை செய்கிறார்கள்.
உதயநிலா
அன்று
சந்திரனைப் பார்த்த
சல்லடைத் தட்டுவழி
இந்திரனைப் பார்த்தாள்
ரதி - அதன்பின்
ஒவ்வொரு நாளும்
விடிகிறது அவனுக்கு
உதயநிலா முகம் பார்த்து...
Labels:
இந்தியப் பண்டிகைகள்,
மீள்பதிவு
செவ்வாய், 11 அக்டோபர், 2011
மனசாட்சி (சவால் சிறுகதை-2011)
சூரியத் தலைவரின் ஆட்சி முடிந்து நிலாராணி ஆட்சிக்கு வந்திருந்த முன்னிரவு. நட்சத்திரங்களுக்குப் போட்டியாக தெருவெங்கும் வண்ண வண்ண விளக்குகள் மின்னின. சாலையை மறித்துச் சமைத்த மேடைமுன் அமைச்சரின் உரைகேட்க ஆவலாய்க் காத்திருந்தது காசும் 'தண்ணியும்' கொடுத்துச் சேர்த்திருந்த மக்கள் வெள்ளம். வீட்டில் பல்பு பியூஸ் போனதால் அருகில் இருக்கும் சரத்தில் இருந்து குண்டு பல்பு ஒன்றைக் கழட்டிப் போகலாமா என தொண்டன் ஒருவன் யோசித்துக் கொண்டிருந்தான். வரிசையாய்க் கார்கள் வந்து நின்றதும் எழுந்த 'வாழ்க வாழ்க' கோஷம் அவன் கவனத்தைக் கலைத்தது. கூட்டம் கலையாமல் இருக்க மைக்கைக் கடித்து ஒப்பேத்திக் கொண்டிருந்த ஒருவன் அவசர அவசரமாய் அப்புறப்படுத்தப்பட்டான். அடுத்ததாக புரட்சிப் புயல், மங்கையர் குலம்காக்க தென் கங்கையில் வந்துதித்த வேங்கை, மாண்புமிகு சமூக நலத்துறை அமைச்சர் திரு.உத்தமன் அவர்கள் உங்களிடையே சிறப்புரை ஆற்றுவார் என வட்டச் செயலாளர் தன் கட்டைக் குரலில் கூவினார்.
வழக்கமான வசனங்களைச் சொல்லி முடித்ததும் அமைச்சர் தன் உதவியாளர் தயாரித்த உரையைத் துவங்கினார். மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடும் போது குழந்தைகள் நலத்தில், பெண்களைப் பேணுவதில், பணியாளர் உயர்வில், பழங்குடி இன மேம்பாட்டில் தமிழகம் முன்னோடியாகத் திகழ்கிறது. ஒவ்வொரு நாளும் நேபாளத்தில் இருந்தும் வங்கதேசத்தில் இருந்தும் ஆயிரக்கணக்கான பெண்களும், குழந்தைகளும் கொல்கத்தாவிற்கும் மும்பைக்கும் கடத்தப்படுகிறார்கள். நாட்டின் தலைநகர் தில்லியில் பாருங்கள் போன மாதம் கூட குண்டு வெடித்தது. இன்னும் இன்னும் பல புள்ளி விவரங்களைச் சொல்லி முடித்து, இதுபோன்ற எந்தப் பிரச்சனையும் இல்லாமல் தமிழ்நாட்டை அமைதிப் பூங்காவாக வைத்திருக்க அயராது பாடுபடுவேன் என்று இந்த மாமேடையில் உங்களுக்கு உறுதியளிக்கிறேன் என்று முடித்தார். நிகழ்ச்சி முடிந்ததும் தன் நீலாங்கரை பண்ணை வீட்டுக்கு ஓய்வெடுக்கக் கிளம்பினார் அமைச்சர்.
மறுநாள் காலை சமூக நலத்துறையின் அலுவலகக் கட்டிடத்தின் ஆறாவது மாடியில் தன் நாற்காலியில் சுழன்றபடி அமைச்சரின் உரையைப் படித்துக் கொண்டிருந்தார் குழந்தைகள் நல இயக்குனர் ராஜமாணிக்கம். ஓராண்டுக்கு முன்வரை டிபார்ட்மென்டில் இவர் முரட்டுச்சிங்கம். மிக நேர்மையானவர் என்று பல பரிசுகளையும் பாராட்டுகளையும் வாங்கியவர். அண்மையில் அமைச்சரான உத்தமனின் நட்பு கிடைத்ததும் அப்படியே மாறிப்போனார். நலத்திட்டங்களுக்கு ஒதுக்கப்படும் நிதியில் கைவைப்பது, அலுவலகத்தில் லஞ்சம் வாங்குவதெல்லாம் அமைச்சரின் செல்வாக்கால் அன்றாடப் பணிகளானது . இவர் மூலம் வசூலாகும் தொகையில் ஒரு பெரும்பகுதியை அமைச்சரிடம் கொண்டு சேர்க்க விஷ்ணு உதவினான். இன்டர்காமில் விஷ்ணுவை அழைத்து தன்னறைக்கு வரச்சொன்னார் ராஜமாணிக்கம்.
விஷ்ணு இதே துறையின் கணக்கெடுப்புப் பிரிவில் வேலை பார்ப்பவன். விஷ்ணுவும் ஆரம்பத்தில் ராஜமாணிக்கம் போல் நல்லவனாகத்தான் இருந்தான். சில நேரங்களில் சக அதிகாரிகள் லஞ்சம் வாங்குவதை போலீசில் கூட போட்டுக் கொடுத்திருக்கிறான். எல்லோரும் நல்லவர்களே, தவறு செய்யத் தகுந்த தருணம் கிடைக்கும் வரை. சில ஆயிரங்கள் மட்டுமே சம்பளம் வாங்கும் ஒருவனை பணத்தால் அடித்தால் அவன் ஊழலுக்குத் துணைபோகத்தானே செய்வான். கொள்கைப் பிடிப்போடு நேர்மையான வாழ்க்கை ஒருசிலருக்கே வாய்க்கிறது. அமைச்சரின் பார்வைக்கு அலுவலகக் கோப்புகளை அனுப்புவதாகச் சொல்லி விஷ்ணு மூலமே 'பெட்டி' அனுப்பத் துவங்கினார் ராஜமாணிக்கம். அதில் லஞ்சப் பணம் இருப்பது தெரியாமல் இருக்க விஷ்ணு என்ன பிஞ்சுக் குழந்தையா? பின்னர் இவனையும் கொஞ்சம் கவனிக்கத் துவங்கினார் ராஜமாணிக்கம். பிறகென்ன அடுத்தவர் செய்யும் தவறைப் பொறுத்துக்கொள்ள முடியாமல் போலீசில் சொன்ன உளவாளியே மெல்ல மெல்ல களவாணி ஆனான்.
அறைக்கதவை தட்டி உத்தரவு பெற்று உள்ளே நுழைந்தான் விஷ்ணு. வா விஷ்ணு, இதுவரை கொஞ்சம் கொஞ்சமாய் மட்டுமே காசுபார்த்த நமக்கு ஒரு பெரிய அமௌன்ட் கிடைக்கப் போகிறது. அடுத்த வாரம் மும்பையில் இருந்து சரக்கு வருகிறது. எல்லாச் சரக்கையும் பத்திரமாய் கொல்கத்தா அனுப்பினால் நம் வேலை முடிந்தது. பேசியபடி மொத்தத் தொகையும் நாளைக்கே நம் கைக்கு வந்துவிடும். அப்புறம் ஒரு முக்கியமான விஷயம், சமீப காலமாக உள்ளிருந்தே காவல் துறைக்கு யாரோ தகவல் தருகிறார்கள். அதனால் நீயும் போலிசுக்குத் தகவல் சொல்லிடு. அதாவது தவறான தகவல் சொல்லி காவல் துறையின் கவனத்தைத் திசைதிருப்பிவிட்டால் நம் வேலை மிகச் சுலபமாக முடிந்துவிடும். இரண்டு நாட்களுக்கு எனக்கு போன், மெசேஜ் எதுவும் பண்ணாதே! தவறான தகவலை போலிசுக்கு அனுப்பியதும், ஒரு துண்டுக் காகிதத்தில் எழுதி எனக்கு வரும் கடிதங்களோடு வைத்திடு என்று பேசிக்கொண்டே போனார். சரி சார், மும்பையில் இருந்து என்ன சரக்கு வருகிறது என்று கேட்டதற்கு அவர் சொன்ன பதிலில் அதிர்ந்தான் விஷ்ணு.
தன்னறைக்குத் திரும்பிய விஷ்ணு கவலையோடு யோசனையில் ஆழ்ந்தான். அடுத்தவாரம் மும்பையில் இருந்து வருவதாய்ச் சொன்ன சரக்கு விளையாட்டுப் பொருட்களோ, வெடிமருந்தோ, கஞ்சா அபினோ , கடத்தல் பொருட்களோ அல்ல. உயிருள்ள ஜீவன்கள். நேபாளத்தில் இருந்து கடத்திவரப்பட்ட அப்பாவி இளம்பெண்கள். தாதர் எக்ஸ்பிரஸில் வரும் அவர்களை சென்னையில் தங்க வைத்து ஹௌரா எக்ஸ்பிரஸில் கொல்கத்தா அனுப்புவது இவர்கள் வேலை. அங்கிருந்து அவர்கள் மத்திய கிழக்கு நாடுகளுக்கு அடிமைகளாக விற்பனை செய்யப்படுவர். அரசியல் அதிகார செல்வாக்குடன் மிகப்பெரிய நெட்வொர்க்கே இதற்குப்பின் செயல்படுகிறது. இவர்கள் அனைவரும் திருமணம், வசதியான வாழ்க்கை என ஆசை காட்டி நேபாளத்தில் இருந்து கடத்திவரப்பட்டவர்கள். ஒருசிலரை அறுபதாயிரம் ரூபாய்க்குப் பெற்றோரே விற்ற கொடுமையும் நடந்திருக்கிறது. சென்னை வருபவர்கள் ஒரு தனியார் அநாதை விடுதியில் தங்கவைக்கப்படுவர். ஒருசிலர் அமைச்சரின் பண்ணை வீட்டுக்கும் அனுப்பப்படுவர். மும்பையில் இருந்து நேரடியாக கொல்கத்தா கொண்டு செல்வதில் சில தடங்கல் ஏற்பட்டதால் இந்த மாற்று ஏற்பாடு. ராஜமாணிக்கத்துடன் சேர்ந்து சிறுசிறு தவறுகள் செய்திருந்த போதும் இத்தனை பேர் வாழ்க்கையைச் சீரழிப்பதில் விஷ்ணுவுக்கு உடன்பாடு இல்லை. நீண்ட யோசனைக்குப் பின் ஒரு முடிவுக்கு வந்தவனாய் கணினியில் சில வாசகங்களை டைப் செய்து பிரிண்ட் எடுத்தான். கூடவே மேலும் கீழும் சில வெள்ளைத்தாள்களைச் சேர்த்துப் பையில் போட்டுக்கொண்டான். 'பொறி' என்று கோகுலுக்கு மெசேஜ் அனுப்பிவிட்டு வீட்டுக்குக் கிளம்பினான் விஷ்ணு.
விஷ்ணு வீட்டிற்கு வந்ததும் முதல் வேலையாக தான் பிரின்ட் செய்து கொண்டுவந்திருந்த பேப்பரை எடுத்து டீப்பாயில் வைத்தபடி கீதா இங்கிருந்த ஸ்கேல் எங்கே என மனைவியிடம் வினவினான். என்னங்க பரீட்சை ஏதேனும் எழுதப்போறீங்களா வந்ததும் வராததுமா ஸ்கேல் கேக்குறீங்க என்றபடி ஸ்டீல் ஸ்கேலோடு வந்தாள் கீதா. தான் டைப் செய்திருந்ததை இரு பகுதிகளாக் கிழித்தான். பிறகு கவர் ஏதும் வாங்காமல் வந்துவிட்டதை உணர்ந்தவனாய், கீதா கடைக்குப் போயிட்டு வரேன் கதவை சாத்திக்கோ என்றபடி வீட்டிலிருந்து வெளியேறினான்.
விஷ்ணு வீட்டிற்கு வந்ததும் முதல் வேலையாக தான் பிரின்ட் செய்து கொண்டுவந்திருந்த பேப்பரை எடுத்து டீப்பாயில் வைத்தபடி கீதா இங்கிருந்த ஸ்கேல் எங்கே என மனைவியிடம் வினவினான். என்னங்க பரீட்சை ஏதேனும் எழுதப்போறீங்களா வந்ததும் வராததுமா ஸ்கேல் கேக்குறீங்க என்றபடி ஸ்டீல் ஸ்கேலோடு வந்தாள் கீதா. தான் டைப் செய்திருந்ததை இரு பகுதிகளாக் கிழித்தான். பிறகு கவர் ஏதும் வாங்காமல் வந்துவிட்டதை உணர்ந்தவனாய், கீதா கடைக்குப் போயிட்டு வரேன் கதவை சாத்திக்கோ என்றபடி வீட்டிலிருந்து வெளியேறினான்.
கோகுல்நாத் நீங்கள் எல்லோரும் எதிர்பார்த்தது போல ஒரு நேர்மையான காவல்துறை அதிகாரி. முன்பு அலுவலகத்தில் லஞ்சம் வாங்கப்படுவதை முன்கூட்டியே விஷ்ணு போட்டுக் கொடுத்ததும் கோகுலுக்குத்தான். போனதடவை இருவரும் பேசிவைத்துக்கொண்ட சங்கேத வார்த்தை தான் பொறி. அதன் பிறகு விஷ்ணுவே ராஜமாணிக்கத்தின் பொறியில் மாட்டிக்கொண்டதால் கோகுலுக்கு தகவல் ஏதும் அனுப்பப்படவில்லை. வெகுநாட்களுக்குப் பிறகு விஷ்ணுவிடம் இருந்து மெசேஜ் வந்த போது கோகுல் வேறோர் வேலையாய் விஷ்ணுவின் வீடிருக்கும் பகுதியில் தான் இருந்தார். அந்த வேலை முடிந்ததும் விஷ்ணுவின் வீட்டிற்குக் கிளம்பினார்.
கடைக்குச் சென்றிருந்த விஷ்ணுவை எதிர்பார்த்துக் கதவைத் திறந்த கீதா கோகுலைப் பார்த்ததும் குழம்பினாள். நான் காவல்துறை அதிகாரி கோகுல்நாத், விஷ்ணு இல்லையா என்று கேட்டார். அவர் பக்கத்துலதான் கடைக்குப் போயிருக்கார், உட்காருங்கள் குடிக்க ஏதேனும் எடுத்து வருகிறேன் என்றபடி சமையலறைக்குச் சென்றாள் கீதா. சுவர்க்கடிகாரம், டிவி என்று நோட்டம்விட்டுக்கொண்டிருந்த கோகுல் டீப்பாயின் மேலிருந்த காகிதங்களைப் பார்த்தார்.
கடைக்குச் சென்றிருந்த விஷ்ணுவை எதிர்பார்த்துக் கதவைத் திறந்த கீதா கோகுலைப் பார்த்ததும் குழம்பினாள். நான் காவல்துறை அதிகாரி கோகுல்நாத், விஷ்ணு இல்லையா என்று கேட்டார். அவர் பக்கத்துலதான் கடைக்குப் போயிருக்கார், உட்காருங்கள் குடிக்க ஏதேனும் எடுத்து வருகிறேன் என்றபடி சமையலறைக்குச் சென்றாள் கீதா. சுவர்க்கடிகாரம், டிவி என்று நோட்டம்விட்டுக்கொண்டிருந்த கோகுல் டீப்பாயின் மேலிருந்த காகிதங்களைப் பார்த்தார்.
"Sir, எஸ்.பி.கோகுலிடம் நான் தவறான குறியீட்டைத்தான் கொடுத்திருக்கிறேன். கவலை வேண்டாம் - விஷ்ணு" என்று ஒன்றிலும் "Mr . கோகுல்- S W H2 6F இதுதான் குறியீடு. கவனம் - விஷ்ணு" என்று மற்றொன்றிலும் இருந்தது. இது என்ன குறியீடு என்று யோசித்துக் கொண்டிருக்கையில் கோகுலின் கைப்பேசி சிணுங்கியது. சார் நான் விஷ்ணு பேசறேன் ஞாபகம் இருக்குங்களா? உங்களிடம் ஒரு முக்கியமான விஷயம் பேசணும் என்றான். போனை கட் பண்ணிட்டு உன் வீட்டுக்கு வா பேசலாம் என்றார் கோகுல்.
விஷ்ணு வந்ததும், சமூக நலத்துறை (Social Welfare) அலுவலகத்தின் ஆறாவது மாடியில் இருக்கும் H2 பிளாக்கில் என்ன நடக்கப்போகிறது எனக்கேட்டார் கோகுல். எவ்வளவு எளிதாய் தன் குறியீட்டைப் புரிந்து கொண்டார் என வியந்த விஷ்ணு எல்லாவற்றையும் விளக்கமாகச் சொன்னான். கவனமாய் விஷ்ணு சொல்வதை முழுவதும் கேட்ட கோகுல்நாத், நாளை ராஜமாணிக்கத்தை நிச்சயம் கைது செய்யப் போவதில்லை என்றார். அதைக்கேட்டு அதிர்ந்த விஷ்ணுவின் முகபாவத்தை ரசித்தபடி தொடர்ந்தார். நாளை கைது செய்தால் ராஜமாணிக்கத்தைத் தவிர அமைச்சர் உட்பட அத்தனை பேரும் தப்பி விடுவார்கள். அவர்கள் திட்டமிட்டபடி அப்படியே தொடரட்டும். நீ ராஜமாணிக்கத்திற்கு டைப் செய்துள்ள வாசகத்தில் "தவறான குறியீட்டைத்தான் கொடுத்திருக்கிறேன்" என்பதை "தவறான தகவலைக் கொடுத்துவிட்டேன்" என்று மாற்றி நாளை காலை அவருக்கு அனுப்பிவிடு. ராஜமாணிக்கத்தின் கைக்குப் பணம் வந்தபின் எனக்கு ஒரு மிஸ்டு கால் கொடு. நீ தவறாகக் கொடுத்தத் தகவலை உறுதிசெய்ய நான்காவது மாடிக்கு நாலு போலீசை அனுப்புகிறேன். பிறகு என்னவெல்லாம் செய்யவேண்டும் என்பதை விளக்கிச் சொல்லிவிட்டுக் கிளம்பினார் கோகுல்.
அடுத்த வாரத்தில் ஒருநாள் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு வந்த தாதர் எக்ஸ்பிரஸில், மும்பையில் இருந்து கடத்தி வரப்பட்ட இருபது பெண்கள் போலீசாரால் மீட்கப்பட்டனர். இன்னும் சில வாரங்கள் கழித்து அமைச்சரின் தொடர்பு அறியப்பட்டதும் இவ்வழக்கு சி.பி.ஐக்கு மாற்றப்பட்டது. ராஜமாணிக்கம், உத்தமன் இன்னும் பல முக்கியப் புள்ளிகள் ஒருநாள் அதிகாலையில் கைது செய்யப்பட்டனர். நாடெங்கும் நீதியின் நம்பிக்கைக் கீற்றுகளை விதைத்தபடி அடிவானில் உதித்தான் ஆரஞ்சுச் சூரியன்.
குறிப்பு: இது பரிசல் + ஆதியுடன் 'யுடான்ஸ்' இணைந்து வழங்கும் சவால் சிறுகதைப் போட்டிக்கான சிறுகதை. யுடான்சில் நீங்கள் அளிக்கும் வாக்குகளுக்கு முடிவைத் தேர்வதில் 10 % பங்குண்டு. எனவே இந்தக் கதை உங்களுக்குப் பிடித்திருந்தால் கீழே உள்ள யு டான்ஸ் பட்டனில் உள்ள லைக்கைக் க்ளிக்கி தவறாமல் வாக்களிக்கவும். நன்றி.
விஷ்ணு வந்ததும், சமூக நலத்துறை (Social Welfare) அலுவலகத்தின் ஆறாவது மாடியில் இருக்கும் H2 பிளாக்கில் என்ன நடக்கப்போகிறது எனக்கேட்டார் கோகுல். எவ்வளவு எளிதாய் தன் குறியீட்டைப் புரிந்து கொண்டார் என வியந்த விஷ்ணு எல்லாவற்றையும் விளக்கமாகச் சொன்னான். கவனமாய் விஷ்ணு சொல்வதை முழுவதும் கேட்ட கோகுல்நாத், நாளை ராஜமாணிக்கத்தை நிச்சயம் கைது செய்யப் போவதில்லை என்றார். அதைக்கேட்டு அதிர்ந்த விஷ்ணுவின் முகபாவத்தை ரசித்தபடி தொடர்ந்தார். நாளை கைது செய்தால் ராஜமாணிக்கத்தைத் தவிர அமைச்சர் உட்பட அத்தனை பேரும் தப்பி விடுவார்கள். அவர்கள் திட்டமிட்டபடி அப்படியே தொடரட்டும். நீ ராஜமாணிக்கத்திற்கு டைப் செய்துள்ள வாசகத்தில் "தவறான குறியீட்டைத்தான் கொடுத்திருக்கிறேன்" என்பதை "தவறான தகவலைக் கொடுத்துவிட்டேன்" என்று மாற்றி நாளை காலை அவருக்கு அனுப்பிவிடு. ராஜமாணிக்கத்தின் கைக்குப் பணம் வந்தபின் எனக்கு ஒரு மிஸ்டு கால் கொடு. நீ தவறாகக் கொடுத்தத் தகவலை உறுதிசெய்ய நான்காவது மாடிக்கு நாலு போலீசை அனுப்புகிறேன். பிறகு என்னவெல்லாம் செய்யவேண்டும் என்பதை விளக்கிச் சொல்லிவிட்டுக் கிளம்பினார் கோகுல்.
அடுத்த வாரத்தில் ஒருநாள் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு வந்த தாதர் எக்ஸ்பிரஸில், மும்பையில் இருந்து கடத்தி வரப்பட்ட இருபது பெண்கள் போலீசாரால் மீட்கப்பட்டனர். இன்னும் சில வாரங்கள் கழித்து அமைச்சரின் தொடர்பு அறியப்பட்டதும் இவ்வழக்கு சி.பி.ஐக்கு மாற்றப்பட்டது. ராஜமாணிக்கம், உத்தமன் இன்னும் பல முக்கியப் புள்ளிகள் ஒருநாள் அதிகாலையில் கைது செய்யப்பட்டனர். நாடெங்கும் நீதியின் நம்பிக்கைக் கீற்றுகளை விதைத்தபடி அடிவானில் உதித்தான் ஆரஞ்சுச் சூரியன்.
குறிப்பு: இது பரிசல் + ஆதியுடன் 'யுடான்ஸ்' இணைந்து வழங்கும் சவால் சிறுகதைப் போட்டிக்கான சிறுகதை. யுடான்சில் நீங்கள் அளிக்கும் வாக்குகளுக்கு முடிவைத் தேர்வதில் 10 % பங்குண்டு. எனவே இந்தக் கதை உங்களுக்குப் பிடித்திருந்தால் கீழே உள்ள யு டான்ஸ் பட்டனில் உள்ள லைக்கைக் க்ளிக்கி தவறாமல் வாக்களிக்கவும். நன்றி.
Labels:
சவால் சிறுகதைப்போட்டி,
சிறுகதை
ஞாயிறு, 2 அக்டோபர், 2011
உயிரின் விலை 27 ரூபாய்
ரிஷி என்ற மனநிலை சரியில்லாத அண்ணனுக்கும் கணேஷ் என்ற உடல் ஊனமுற்ற அண்ணனுக்கும் ஒரே தம்பியான 22 வயது உமேஷ் குமார் பாண்டே மானேசர் - குர்கான் நெடுஞ்சாலையில் உள்ள ஓர் சுங்கச்சாவடியில் நான்கு மாதத்திற்கு முன்னர் பணியில் சேர்ந்தான். செப்டெம்பர் 22 நள்ளிரவு பன்னிரண்டு மணியளவில் வழக்கம் போல டோல் பூத்தில் பணம் வசூலித்துக் கொண்டிருந்தான். டோல் பூத் விதிகளின் படி அருகில் இருபது கிலோமீட்டர் சுற்றுவட்டத்தில் உள்ள கிராமங்களின் வாகனகளுக்கு சுங்கவரி கிடையாது.
வெள்ளை நிற போலீரோவில் விஜய்வீர் யாதவ் (28) டோல் பூத்திற்கு வந்த போது உமேஷ் 27 ரூபாய்க் கட்டணம் கேட்டான். அதை மறுத்த விஜய் தான் அருகில் உள்ள ஓர் கிராமத்திலிருந்து வருவதாகச் சொன்னான். விதிப்படி வண்டியின் ஒரிஜினல் RC காண்பித்தால் சுங்கவரி கட்டத் தேவையில்லை. விஜயிடம் RC எதுவும் இல்லை வெறும் ஓட்டுனர் உரிமம் மட்டுமே வைத்திருந்தான். இருந்த போதும் விஜய் மிரட்டியதால் உமேஷ் கேட்டைத் திறந்துவிட்டு போகும்படிச் சொன்னான். அதன் பின்னரும் சும்மா போகாமல் உமேஷை சுட்டுவிட்டுச் சென்றான் அப்பாவி. கழுத்தில் குண்டு பாய்ந்து சுருண்டு விழுந்தான் உமேஷ். இந்த வீடியோவைப் பாருங்கள்.
கேட் திறந்தே இருந்ததால் பின்னிருந்த ஐந்தாறு வாகனங்களும் கிடைத்த வாய்ப்பைப் பயன்படுத்தி டோல் செலுத்தாமல் வேகமாய் வெளியேறின... உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த உமேஷை விட்டுவிட்டு. பின்னொரு ட்ரக்காரர் கவனித்து தகவல் சொல்லி மருத்துவமனை கொண்டுசெல்லும் முன் உயிர்விட்டான் உமேஷ். நியாயமாய் 27 ரூபாய்க் கட்டணம் செலுத்தச் சொன்னதற்காக கொலைசெய்யப்பட்ட கொடுமையை என்னவென்று சொல்வது. உமேஷின் மறைவால் மூன்றே மாதத்திற்கு முன் உமேஷை மணந்தவளும் உமேஷின் சம்பளத்தை மட்டுமே நம்பி உயிர்வாழ்ந்த நால்வரும் (வயதான பெற்றோர்கள் மற்றும் இரு அண்ணன்கள்) மீளாத்துயரில் வாடுகின்றனர். அவர்களுக்கு ஆறுதல் சொல்ல நம்மிடம் வார்த்தைகளில்லை. இந்தக் குடும்பத்திற்கு உதவ முன்வருவோர் கீழ்காணும் முகவரிக்கு காசோலை அனுப்பலாம். (நன்றி: NDTV)
Ramrati Pandey
Account Number: 30496591243
State Bank of India
Birha, Bijhauli, Hanumana,
Rewa, Madhya Pradesh
India
Pin Code: 486335
மேலும் விவரங்களுக்கு NDTV ன் இந்த லிங்கைப் பார்க்கவும்.
Labels:
சமூகம்,
செய்திகள்,
நிகழ்வுகள்
புதன், 28 செப்டம்பர், 2011
நாய்க்கடி நாள் வாழ்த்துக்கள்
இன்று உலக ராபிஸ்(Rabies) தினம். நண்பர்கள் தினம், மகளிர் தினம், அப்பாக்கள் தினம், அன்னையர் தினம், நாத்தனார் தினம், கொழுந்தியா தினமெல்லாம் கொண்டாட ஆரம்பித்துவிட்ட நாம் நாய்க்கடி தினம் பற்றியும் ஒரு சில தகவல்களைப் பகிர்ந்துகொள்ளுவதில் தவறில்லை தானே!
ராபிஸ் என்பது வைரஸ் தாக்குதலுக்கு உண்டான நாயிடாமிருந்து மனிதனுக்குப் பரவும் கொடுமையான நோய். கடிபட்ட இடத்திலிருந்து வைரஸ் நரம்பு மண்டலம் வழியாக மூளையைத் தாக்கும். இதற்கு ஒரு சில வாரங்கள் கூட ஆகலாம். ராபிஸ் வைரஸ் மூளையை அடையும் முன் தடுக்காவிட்டால் நிச்சயம் மரணம் தான். எனவே நாய்க்கடித்த உடன் செய்யவேண்டியவை என்னவென்று பார்க்கலாம்.
- கடிபட்ட இடத்தை நிறைய தண்ணீர் விட்டு குறைந்தது பத்து நிமிடமேனும் நன்றாகக் கழுவ வேண்டும்.
- டெட்டால் அல்லது சோப்புத் தண்ணீரைத் தெளிக்கலாம். ஆனால் கடிபட்ட இடத்தை மூடக் கூடாது.
- அருகில் உள்ள மருத்துவரிடம் சென்று ராபிஸ் நோய்க்கான தடுப்பூசி கட்டாயம் போட்டுக் கொள்ள வேண்டும்.
Labels:
செய்திகள்
வியாழன், 8 செப்டம்பர், 2011
தில்லியில் நிலநடுக்கம்
நேற்று நள்ளிரவு 11.28 மணியளவில் தில்லியில் வலுவான நிலநடுக்கம் உணரப்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 4.2 ஆக பதிவான இந்த நிலஅதிர்வால் சேதங்கள் எதுவும் அறியப்படவில்லை. எங்கள் அடுக்ககத்தில் இருந்து அனைவரும் வீட்டிலிருந்து வெளியே வந்து குட் நைட் சொல்லிக்கொண்டு தூங்கப்போனோம். ஆனாலும் தில்லி நிலநடுக்க வரைபடத்தில் zone -4 இருப்பதால் நிலநடுக்க வாய்ப்புகள் அதிகம்.
தில்லி உயர்நீதி மன்ற வாயிலில் குண்டு வெடிப்பில் 11 இறந்த அதே நாளில் நிலநடுக்கமும் வந்து தலைநகர மக்களை அதிர்சிக்குள்ளாக்கியது.
Labels:
செய்திகள்
திங்கள், 5 செப்டம்பர், 2011
ஆசிரியப்பா
'அ'னா சொல்லித்தந்த
முதல்வகுப்பு ஆசிரியை.
தொடையில் ஊசிபோட்ட
நாலாம்வகுப்பு ராமசாமி.
பேனா பரிசளித்து
பெரிதும் ஊக்குவித்த
வரலாறு - சரஸ்வதி.
எழுதிக்கொடுத்து என்னை
தமிழ்ச்சங்கத்தில் பேசவைத்த
வெங்கட்ட ராசன்.
பொதுத்தேர்வுக் கணிதத்தில்
நூற்றுக்கு நூறு
வாங்கவைத்த நடேசன்.
தேர்வறைக்குள் வந்து
தாவரவியலா? விலங்கியலா?
எது முதலில்
எழுதுகிறேன் எனப்பார்த்து
போட்டிப்பாசம் காட்டிய
உயிரியல் சகோதரிகள்.
வேதியியலோடு சேர்த்து
தேசியம் கற்பித்த
பதாமி.
ஆய்வுப்பாதையில் என்
ஆர்வத்தைத் தூண்டிய
ரவிசங்கர்.
இப்படி
ஆசிரியர்தினத்தில்
நினைத்து மகிழ
நெஞ்சார்ந்த நன்றி சொல்ல
நிறையபேர் இருந்தும்..........
'ஷூ எங்கே எனக்கேட்டு
மரஸ்கேலில் அடித்த
ஜோதிவித்யாலயா டீச்சர்'
நீங்கள்தான் என்
நினைவிலதிகம் வருகிறீர்கள்.
உங்களால்தான்
தமிழ்வழிக் கல்விக்கு
தடம்மாறினேன் நான்.
உங்களுக்கென் தனிவணக்கம்.
Labels:
கவிதை
வியாழன், 1 செப்டம்பர், 2011
ஞாயிறு, 14 ஆகஸ்ட், 2011
தப்புத் தப்பாய் ஒரு தப்பு
மனதின் ஆசையை நான்
மறைத்து வைத்தது தப்பா?
உன்னலம் கருதி எனை
ஒளித்து வைத்தது தப்பா?
மனதைத் தந்தவுடன் நான்
மறுத்துப் பேசியது தப்பா?
மனதிற்கு நல்லது நம்
மாறாத நட்பென்றது தப்பா?
உன்னுடன் நான் பேசியதில்
ஒரு வார்த்தை ஏதேனும் தப்பா?
நெஞ்சைக் கீறிவிட்டு நீயே
பஞ்சால் துடைத்து மருந்திட்டாய்.
ஒருகையால் வில் கொடுத்து
மறுகையால் நாண் அறுத்தாய்.
மலர்கின்ற பூக்களை நீ
கிள்ளிவிட்டுக் கட்டுகின்றாய்.
நட்பென்ற கண்ணாடிக் கிண்ணமதை
நழுவவிட்டு ஒட்டுகின்றாய்.
மனதில் குழப்பத்துடன் - நான்
மதிலேறத் தயாரில்லை.
காதல் கசாயம் குடிக்கக்
காய்ச்சல் இல்லை நமக்கு.
நமக்கிடையில் உள்ளது
நட்பு மட்டுமென்று
நம்பினால் - நீ
கரத்தைக் கொடு -அன்றில்
மறந்து விடு.
02.08.1999
11.45 am.
11.45 am.
ஞாயிறு, 31 ஜூலை, 2011
பறந்துகொண்டேயிருப்பேன்-அப்துல் கலாம்
கடந்த வெள்ளி அன்று தில்லி தமிழ்ச் சங்கத்தில் வடக்கு வாசல் நடத்திய "சுப்புடு நினைவில் ஒரு இசைப் பயணம் மற்றும் வடக்கு வாசல் பதிப்பக நூல்கள் வெளியீட்டு விழா"வுக்குச் சென்றிருந்தேன். அந்நிகழ்வில் தில்லிவாழ் தமிழ்ப்பதிவர், மொழிபெயர்ப்பாளர், ஓய்வுபெற்ற தமிழ்ப் பேராசிரியை சுசீலா அம்மாவின் தேவந்தி என்னும் சிறுகதைத் தொகுப்பு வெளியிடப் பட்டது. நூல்களை வெளியிட்டுச் சிறப்புரை ஆற்றியவர் திரு.அப்துல் கலாம் அவர்கள். தேன்தமிழ் கலந்து அவர் ஆற்றிய உரையிலிருந்து சில தித்திக்கும் துளிகள்....
சுப்புடு தர்பார் என்னும் தலைப்பில் சுப்புடு சார் எழுதிய புத்தகங்களை சில ஆண்டுகளுக்கு முன் படித்தேன். பர்மாவில் இருந்து அகதியாய் நடந்தே இந்தியா வந்தது பற்றியும் சுதந்திர போராட்டத்தின் உச்ச கட்டத்தில் தில்லியில் நாடகங்கள் நடத்தியது பற்றியும் அதில் எழுதியிருந்தார். அதைப் படித்ததும் சுப்புடு சாரை ஜனாதிபதி மாளிகைக்கு அழைத்தேன். அங்குள்ள மொகல் கார்டன் நந்தவனத்தில் நெடுநேரம் செலவிட்டார். இயற்கை அழகுகளை ரசித்தார். ரோஜா மலர்களை வெகுநேரம், சுமார் ஒருமணி நேரம் வருடிக் கொண்டிருந்தார். அப்போது அதன் அர்த்தம் எனக்குத் தெரியவில்லை. பல நாட்கள், பல மாதங்கள், பல ஆண்டுகள் கடந்த பின்னர் 18 -01 - 2005 ல் எனக்கு சுப்புடு சாரிடம் இருந்து ஒரு கடிதம் வந்தது. அதில், நான் தொண்ணூரை நெருங்கி விட்டேன் நெற்றியில் திருநீறு பூசி தென்திசைப் பயணம் செல்ல நேரம் வந்துவிட்டது. ஒருவேளை நான் மரணம் எய்தினால் எனக்கு மொகல் கார்டனில் இருந்து ஒற்றை ரோஜா தருவீர்களா? என்று எழுதியிருந்தார். பின்னொருநாள் நள்ளிரவில் துக்க செய்தி கேட்டதும் உடனே சென்று ரோஜாமலர்களைப் பறித்து வந்து சுப்புடு சாருக்கு அஞ்சலி செலுத்தினேன்.
நீ நீயாக இரு...
இளைய நண்பர்களே... இளைய மனம் கொண்டோரே...வீட்டிலே மின்சார பல்பைக் கண்டதும் தாமஸ் ஆல்வா எடிசன் நம் நினைவுக்கு வருகிறார். வானில் சாத்தமிட்டு சீறிப் பாயும் ஆகாய விமானங்களைப் பார்க்கையில் ரைட் சகோதரர்கள் மனதில் வருகிறார்கள். தொலைபேசி / கைப்பேசிப் பார்க்கையில் கிரகாம்பெல் மனதிற்கு அருகாமையில் வருகிறார். கடல் நிறம் ஏன் நீலமாக இருக்கிறது என்ற கேள்வி வருகையில் லண்டனில் இருந்து கல்கத்தாவுக்கு கப்பல்வழிப் பயணம் செய்தபோது இந்திய விஞ்ஞானி நிறப்பிரிகை பற்றி கண்டறிந்த ராமன் விளைவு நினைவுக்கு வருகிறது. அகிம்சா தர்மம் என்ற கத்தியில்லா ரத்தமில்லா ஆயுதத்தைக் கொண்டு உலகுக்கே புதுப் படம் நடத்தினார் காந்தி. இப்படி ஒவ்வொருவரும் ஒவ்வொரு வகையில் தனித்தன்மை பெற்றவர்கள். இந்த உலகில் பிறந்த அனைவருக்கும் வரலாற்றின் பக்கங்களில் ஒரு பக்கம் ஒதுக்கப்பட்டிருக்கிறது. ஆனால் அந்தப் பக்கத்தை இந்த உலகையே படிக்க வைப்பது உங்கள் கைகளில் தான் உள்ளது.
நல்ல புத்தகங்கள்
நல்ல கற்பனை சக்தியை வளர்க்கும்.
நல்ல கற்பனைச் சக்தி
நல்ல சிந்திக்கும் திறனை வளர்க்கும்
நல்ல சிந்தனை
சிறந்த அறிவைக் கொடுக்கும்
சிறந்த அறிவு
நம்மை மேம்பட வைக்கும்.
இன்று வடக்கு வாசல் பதிப்பகத்தார் ஐந்து அருமையான புத்தகங்களை வெளியிடுகின்றனர்.
சிந்தனைச் சிதறல்கள் - ய.சு.ராஜன்
விருட்சங்களாகும் சிருவிதைகள் - சி.டி.சனத்குமார்
சனிமூலை - ராகவன் தம்பி
வடக்குவாசல் நேர்காணல்கள் - ராகவன் தம்பி
தேவந்தி - எம்.ஏ.சுசீலா
(தேவந்தி சிறுகதைத் தொகுப்பை திரு. அப்துல் கலாம் அய்யா வெளியிட சுசீலா அம்மாவின் மகள் மீனு பிரமோதும், நண்பர் பதிவர் விட்டலனும் பெற்றுக்கொள்கிறார்கள்)
ஒவொரு நூலில் இருந்தும் மேற்கோள் காட்டி வாழ்த்திக் கொண்டே வந்தவர். இறுதியாய் தேவந்தி என்னும் அருமையான சிறுகதைத் தொகுப்பு... தேவந்தி சிலபதிகாரக் கண்ணகியின் தோழி (சரி தானேம்மா என்கிறார் சுசீலா அம்மாவைப் பார்த்து). சாத்திரம் அன்று...சதி! என்னும் கதையில் இருந்து, "சரயு நீரைக் கண்களில் ஒற்றித் தலையில் தெளித்தபடி... ஆற்றில் இறங்கி, அதன் ஆழத்தில் அமிழ்ந்தபடி போய்க்கொண்டே இருக்கிறான் ராமன். எங்கோ தொடுவானத்தில் சமநீதி என்னும் உதயத்தின் விடியல் மெல்லியதொரு கீற்றாய் தெரிகிறது" என்ற வரிகளைப் பாராட்டினார்.
முத்தாய்ப்பாய் ஒரு கவிதை சொல்லி அகிருந்த அனைவரையும் கூடவே சொல்லச் சொன்னார்.
நான் பிறந்தேன்
அரும்பெரும் சக்தியுடன்...
நான் பிறந்தேன்
நற்பண்புகளுடன்...
நான் பிறந்தேன்
கனவுடன்...
வளர்ந்தேன்
நல்ல எண்ணங்களுடன்...
நான் பிறந்தேன்
உயர் எண்ணங்களை
செயல்படுத்த...
நான் பிறந்தேன்
ஆராய்ச்சி உள்ளத்துடன்...
நான் பிறந்தேன்
ஆகாய உச்சியில் பறக்க...
நான் பூமியில்
ஒருபோதும் தவழ மாட்டேன்.
தவழவே மாட்டேன்.
ஆகாய உச்சிதான்
என் லட்சியம்
பறப்பேன் வானில்
பறந்துகொண்டேயிருப்பேன்....
Labels:
கவிதை,
நிகழ்வுகள்,
பதிவுலகம்
வியாழன், 28 ஜூலை, 2011
இன்னும் கொஞ்சம்...
நிலவு
பேருந்து சன்னலில்
ஒட்டிய ஸ்டிக்கராய்
உடன்வரும் நிலா
என்மன சன்னலில்
உன் நினைவுகளும்....
பேருந்து சன்னலில்
ஒட்டிய ஸ்டிக்கராய்
உடன்வரும் நிலா
என்மன சன்னலில்
உன் நினைவுகளும்....
தனிமரத்தோப்பு
ஒரு பூ மாலையாகாது
ஒரு துளி கடலாகாது
ஒரு இலை கிளையாகாது
ஒரு கிளை மரமாகாது
ஒரு மரம் தோப்பாகாது
ஆனால் நீ
ஒருத்தி மட்டும் எப்படி
உலகமானாய் எனக்கு......
வேறோர் குழந்தையுடன்
விளையாடிக் கொஞ்சினால்
ஓடிவந்தெனைக் கட்டிக்கொள்கிறாள்
செல்ல மகள்.
இப்படித்தான் நீயும்
அன்றோர் நாள்
காதலைச் சொன்னாய்
குழந்தை மனதோடு........
ஒவ்வொரு தேர்வு
எழுதி முடித்ததும்
உள்ளுக்குள் தோன்றும்
இன்னும் கொஞ்சம்
நல்லா படிச்சிருக்கலாம்.
ஒவ்வொரு முறை
சந்தித்துப் பிரிகையிலும்
உள்ளுக்குள் தோன்றும்
இன்னும் கொஞ்சம்
உன்னோடு பேசியிருக்கலாம்....
Labels:
கவிதை,
காதல்,
குட்டிக் கவிதைகள்
புதன், 20 ஜூலை, 2011
விளக்கம்
அண்மையில் திரு பாலசுப்ரமணியம் அவர்கள் இரு பாடல்களை பதிவிட்டு அதற்கான விளக்கம் கேட்டிருந்தார். இணையத்தில் தேடியதில் எனக்கு கிடைத்த விவரங்களை இங்கே பதிவிடுகிறேன்.
திருவெழுக்கூற்றிருக்கை
கவித்திறனில் ஆசுகவி, மதுரகவி, சித்திரக்கவி மற்றும் விஸ்தாரக்கவி என்று நான்கு பிரிவுகள் உண்டாம். இவற்றில் சித்திரக்கவி என்பது ஒரு உருவம் தோன்றுமாறு கவி அமைப்பதாகும். திருவெழுக்கூற்றிருக்கை என்பது சித்திரக்கவியில் அடங்கும். இதில் சக்ரபந்தம், பத்மபந்தம், நாகபந்தம், ரதபந்தம் முதலான வகைகள் உண்டு. ரதபந்தம் என்பது தேரின் உருவத்தை கட்டங்களில் கொண்டுவந்து, அந்த கட்டங்களுக்குள் எண்கள் இட்டு, அந்த எண்ணிக்கை பாசுரத்தின் சொற்களாக அமையும்படிச் செய்வதாகும். திருமங்கையாழ்வார், அருணகிரிநாதர், திருஞானசம்பந்தர் இன்னும் பலர் திருவெழுக்கூற்றிருக்கை அருளியுள்ளனர்.http://namperumal.wordpress.com/2008/12/11/
http://namperumal.files.wordpress.com/2008/12/thiruvezhu1.படப்
இரண்டாம் பாடல் பன்னிரு திருமுறைகளில் முதலாம் திருமுறையில் உள்ளது.
பாடல் எண் : 1 | பண் : வியாழக்குறிஞ்சி |
ஓருரு வாயினை மானாங் காரத் தீரியல் பாயொரு விண்முதல் பூதலம் ஒன்றிய விருசுட ரும்பர்கள் பிறவும் படைத்தளித் தழிப்பமும் மூர்த்திக ளாயினை இருவரோ டொருவ னாகி நின்றனை 5. ஓரா னீழ லொண்கழ லிரண்டும் முப்பொழு தேத்திய நால்வர்க் கொளிநெறி காட்டினை நாட்ட மூன்றாகக் கோட்டினை இருநதி யரவமோ டொருமதி சூடினை ஒருதா ளீரயின் மூவிலைச் சூலம் 10 நாற்கான் மான்மறி யைந்தலை யரவம் ஏந்தினை காய்ந்த நால்வாய் மும்மதத் திருகோட் டொருகரி யீடழித் துரித்தனை ஒருதனு விருகால் வளைய வாங்கி முப்புரத் தோடு நானில மஞ்சக் 15 கொன்று தலத்துற வவுணரை யறுத்தனை ஐம்புல னாலா மந்தக் கரணம் முக்குண மிருவளி யொருங்கிய வானோர் ஏத்த நின்றனை யொருங்கிய மனத்தோ டிருபிறப் போர்ந்து முப்பொழுது குறைமுடித்து 20 நான்மறை யோதி யைவகை வேள்வி அமைத்தா றங்க முதலெழுத் தோதி வரன்முறை பயின்றெழு வான்றனை வளர்க்கும் பிரமபுரம் பேணினை அறுபத முரலும் வேணுபுரம் விரும்பினை 25 இகலிய மைந்துணர் புகலி யமர்ந்தனை பொங்குநாற் கடல்சூழ் வெங்குரு விளங்கினை பாணிமூ வுலகும் புதையமேன் மிதந்த தோணிபுரத் துறைந்தனை தொலையா விருநிதி வாய்ந்த பூந்தரா யேய்ந்தனை 30 வரபுர மொன்றுணர் சிரபுரத் துறைந்தனை ஒருமலை யெடுத்த விருதிற லரக்கன் விறல்கெடுத் தருளினை புறவம் புரிந்தனை முந்நீர்த் துயின்றோ னான்முக னறியாப் பண்பொடு நின்றனை சண்பை யமர்ந்தனை 35 ஐயுறு மமணரு மறுவகைத் தேரரும் ஊழியு முணராக் காழி யமர்ந்தனை எச்சனே ழிசையோன் கொச்சையை மெச்சினை ஆறு பதமு மைந்தமர் கல்வியும் மறைமுத னான்கும் 40 மூன்று காலமுந் தோன்ற நின்றனை இருமையி னொருமையு மொருமையின் பெருமையும் மறுவிலா மறையோர் கழுமல முதுபதிக் கவுணியன் கட்டுரை கழுமல முதுபதிக் கவுணிய னறியும் 45 அனைய தன்மையை யாதலி னின்னை நினைய வல்லவ ரில்லைநீ ணிலத்தே. |
சொரூப நிலையில் விளங்கும் பரசிவம் ஆகிய நீ உனது இச்சையால் ஐந்தொழில்களை நிகழ்த்த வேண்டி எடுத்துக் கொண்ட ஓருருவமாகிய திருமேனியை உடையை ஆயினை,
உன் சக்தியைக் கொண்டு அவ் ஐந்தொழில்களை நடத்தும் திருவுளக்குறிப்போடு சத்தி சிவம் என்னும் இரு உருவாயினை,
விண் முதலிய பூதங்களையும் சந்திர சூரியர்களையும் தேவர்கள் மக்கள் முதலியோரையும் படைத்துக் காத்து அழிக்க அயன் அரி அரன் என்னும் மும்மூர்த்திகள் ஆயினை,
பிரமன் திருமால் ஆகிய இருவரையும் வலத்திலும் இடத்திலும் அடக்கி ஏக மூர்த்தியாக நின்றாய்,
ஒப்பற்ற கல்லால மரநிழலில் உனது இரண்டு திருவடிகளை முப்பொழுதும் ஏத்திய சனகர், சனந்தனர் முதலிய நால்வர்க்கு ஒளி நெறியைக் காட்டினாய்,
சூரியன் சந்திரன் அக்கினி ஆகியோரை மூன்று கண்களாகக் கொண்டு உலகை விழுங்கிய பேரிருளை ஓட்டினாய்,
கங்கையையும் பாம்பையும் பிறைமதியையும் முடிமிசைச் சூடினாய்,
ஒரு தாளையும் ஈருகின்ற கூர்மையையும் முத்தலைகளையும் உடைய சூலத்தையும் நான்கு கால்களையும் உடைய மான் கன்று, ஐந்து தலை அரவம் ஆகியவற்றையும் ஏந்தினாய்,
சினந்து வந்த, தொங்கும் வாயையும் இரு கோடுகளையும் கொண்ட ஒப்பற்ற யானையை அதன் வலி குன்றுமாறு அழித்து அதன் தோலை உரித்துப் போர்த்தாய்,
ஒப்பற்ற வில்லின் இருதலையும் வளையுமாறு செய்து கணை தொடுத்து முப்புரத்தசுரர்களை இவ்வுலகம் அஞ்சுமாறு கொன்று தரையில் அவர்கள் இறந்து கிடக்குமாறு அழித்தாய்.
உன் சக்தியைக் கொண்டு அவ் ஐந்தொழில்களை நடத்தும் திருவுளக்குறிப்போடு சத்தி சிவம் என்னும் இரு உருவாயினை,
விண் முதலிய பூதங்களையும் சந்திர சூரியர்களையும் தேவர்கள் மக்கள் முதலியோரையும் படைத்துக் காத்து அழிக்க அயன் அரி அரன் என்னும் மும்மூர்த்திகள் ஆயினை,
பிரமன் திருமால் ஆகிய இருவரையும் வலத்திலும் இடத்திலும் அடக்கி ஏக மூர்த்தியாக நின்றாய்,
ஒப்பற்ற கல்லால மரநிழலில் உனது இரண்டு திருவடிகளை முப்பொழுதும் ஏத்திய சனகர், சனந்தனர் முதலிய நால்வர்க்கு ஒளி நெறியைக் காட்டினாய்,
சூரியன் சந்திரன் அக்கினி ஆகியோரை மூன்று கண்களாகக் கொண்டு உலகை விழுங்கிய பேரிருளை ஓட்டினாய்,
கங்கையையும் பாம்பையும் பிறைமதியையும் முடிமிசைச் சூடினாய்,
ஒரு தாளையும் ஈருகின்ற கூர்மையையும் முத்தலைகளையும் உடைய சூலத்தையும் நான்கு கால்களையும் உடைய மான் கன்று, ஐந்து தலை அரவம் ஆகியவற்றையும் ஏந்தினாய்,
சினந்து வந்த, தொங்கும் வாயையும் இரு கோடுகளையும் கொண்ட ஒப்பற்ற யானையை அதன் வலி குன்றுமாறு அழித்து அதன் தோலை உரித்துப் போர்த்தாய்,
ஒப்பற்ற வில்லின் இருதலையும் வளையுமாறு செய்து கணை தொடுத்து முப்புரத்தசுரர்களை இவ்வுலகம் அஞ்சுமாறு கொன்று தரையில் அவர்கள் இறந்து கிடக்குமாறு அழித்தாய்.
ஐம்புலன்கள் நான்கு அந்தக் கரணங்கள், முக்குணங்கள் இரு வாயுக்கள் ஆகியவற்றை ஒடுக்கியவர்களாய தேவர்கள் ஏத்த நின்றாய்,
ஒருமித்த மனத்தோடு, இரு பிறப்பினையும் உணர்ந்து முச்சந்திகளிலும் செய்யத்தக்க கடன்களை ஆற்றி நான்மறைகளை ஓதி ஐவகை வேள்விகளையும் செய்து ஆறு அங்கங்களையும் ஓதி, பிரணவத்தை உச்சரித்து தேவர்களுக்கு அவி கொடுத்து மழை பெய்விக்கும் அந்தணர் வாழும் பிரமபுரத்தை விரும்பினாய், ஆறுகால்களை உடைய வண்டுகள் இசைபாடும் பொழில் சூழ்ந்த வேணுபுரத்தை விரும்பினாய்,
தேவர்கள் புகலிடம் என்று கருதி வாழ்ந்த புகலியை விரும்பினாய். நீர் மிகுந்த கடல் சூழ்ந்த வெங்குரு என்னும் தலத்தை விரும்பினாய்.
மூவுலகும் நீரில் அழுந்தவும் தான் அழுந்தாது மிதந்த தோணிபுரத்தில் தங்கினாய்.
வழங்கக் குறையாத செல்வவளம் மிக்க பூந்தராயில் எழுந்தருளினாய்.
வரந்தருவதான சிரபுரத்தில் உறைந்தாய்,
ஒப்பற்ற கயிலை மலையைப் பெயர்த்த பெருந்திறல் படைத்த இராவணனின் வலிமையை அழித்தாய்.
புறவம் என்னும் தலத்தை விரும்பினாய்,
கடலிடைத் துயிலும் திருமால் நான்முகன் ஆகியோர் அறிய முடியாத பண்பினை உடையாய்.
சண்பையை விரும்பினாய்.
ஐயுறும் சமணரும் அறுவகையான பிரிவுகளை உடையபுத்தரும் ஊழிக்காலம் வரை உணராது வாழ்நாளைப் பாழ் போக்கக் காழிப்பதியில் எழுந்தருளியுள்ளாய்.
வேள்வி செய்வோனாகிய ஏழிசையோன் வழிபட்ட கொச்சை வயத்தை விரும்பி வாழ்கின்றாய்,
ஆறு பதங்கள், ஐந்து வகைக் கல்வி, நால் வேதம், மூன்று, காலம், ஆகியன தோன்ற நிற்கும் மூர்த்தியாயினாய்,
சத்தி சிவம் ஆகிய இரண்டும் ஓருருவமாய் விளங்கும் தன்மையையும் இவ்விரண்டு நிலையில் சிவமாய் ஒன்றாய் இலங்கும் தன்மையையும் உணர்ந்த குற்றமற்ற அந்தணாளர் வாழும் கழுமலம் என்னும் பழம்பதியில் தோன்றிய கவுணியன்குடித் தோன்றலாகிய ஞானசம்பந்தன் கட்டுரையை விரும்பிப் பிரமன் மண்டையோட்டில் உண்ணும் பெருமானே அறிவான். அத்தன்மையை உடைய நின்னை உள்ளவாறு அறிவார், நீண்ட இவ்வுலகிடை இனிப்பிறத்தல் இலர்.
ஒருமித்த மனத்தோடு, இரு பிறப்பினையும் உணர்ந்து முச்சந்திகளிலும் செய்யத்தக்க கடன்களை ஆற்றி நான்மறைகளை ஓதி ஐவகை வேள்விகளையும் செய்து ஆறு அங்கங்களையும் ஓதி, பிரணவத்தை உச்சரித்து தேவர்களுக்கு அவி கொடுத்து மழை பெய்விக்கும் அந்தணர் வாழும் பிரமபுரத்தை விரும்பினாய், ஆறுகால்களை உடைய வண்டுகள் இசைபாடும் பொழில் சூழ்ந்த வேணுபுரத்தை விரும்பினாய்,
தேவர்கள் புகலிடம் என்று கருதி வாழ்ந்த புகலியை விரும்பினாய். நீர் மிகுந்த கடல் சூழ்ந்த வெங்குரு என்னும் தலத்தை விரும்பினாய்.
மூவுலகும் நீரில் அழுந்தவும் தான் அழுந்தாது மிதந்த தோணிபுரத்தில் தங்கினாய்.
வழங்கக் குறையாத செல்வவளம் மிக்க பூந்தராயில் எழுந்தருளினாய்.
வரந்தருவதான சிரபுரத்தில் உறைந்தாய்,
ஒப்பற்ற கயிலை மலையைப் பெயர்த்த பெருந்திறல் படைத்த இராவணனின் வலிமையை அழித்தாய்.
புறவம் என்னும் தலத்தை விரும்பினாய்,
கடலிடைத் துயிலும் திருமால் நான்முகன் ஆகியோர் அறிய முடியாத பண்பினை உடையாய்.
சண்பையை விரும்பினாய்.
ஐயுறும் சமணரும் அறுவகையான பிரிவுகளை உடையபுத்தரும் ஊழிக்காலம் வரை உணராது வாழ்நாளைப் பாழ் போக்கக் காழிப்பதியில் எழுந்தருளியுள்ளாய்.
வேள்வி செய்வோனாகிய ஏழிசையோன் வழிபட்ட கொச்சை வயத்தை விரும்பி வாழ்கின்றாய்,
ஆறு பதங்கள், ஐந்து வகைக் கல்வி, நால் வேதம், மூன்று, காலம், ஆகியன தோன்ற நிற்கும் மூர்த்தியாயினாய்,
சத்தி சிவம் ஆகிய இரண்டும் ஓருருவமாய் விளங்கும் தன்மையையும் இவ்விரண்டு நிலையில் சிவமாய் ஒன்றாய் இலங்கும் தன்மையையும் உணர்ந்த குற்றமற்ற அந்தணாளர் வாழும் கழுமலம் என்னும் பழம்பதியில் தோன்றிய கவுணியன்குடித் தோன்றலாகிய ஞானசம்பந்தன் கட்டுரையை விரும்பிப் பிரமன் மண்டையோட்டில் உண்ணும் பெருமானே அறிவான். அத்தன்மையை உடைய நின்னை உள்ளவாறு அறிவார், நீண்ட இவ்வுலகிடை இனிப்பிறத்தல் இலர்.
நன்றி: http://www.thevaaram.org/
Labels:
பதிவுலகம்
ஞாயிறு, 3 ஜூலை, 2011
அப்படியும் இப்படியும்...
நீயென்னை முத்தமிட்டும்
எழுப்பியிருக்கிறாய்
காது கிழிய
சத்தமிட்டும்
எழுப்பியிருக்கிறாய்!
என் கன்னங்கள்
வெட்கத்திலும் சிவந்திருக்கிறது.
சிலநாள் அறைவாங்கி
வீங்கியும் சிவந்திருக்கிறது!
உன் பார்வைகள்
என்னைத்
தொட்டும் சிரித்ததுண்டு
சுட்டும் எரித்ததுண்டு!
உன் ஸ்பரிசத்தில்
பூக்கள் சிலநாளும்
பூச்சிகள் சிலநாளும்
நினைவுக்கு வந்ததுண்டு!
உன் சொற்களென்
மனக்காயத்தை
குணமாக்கியதுமுண்டு இன்னும்
ரணமாக்கியதுமுண்டு!
அத்தனை முரண்களையும்
அமைதியாய் ஏற்கிறேன்
அம்மா என்றழைக்கும்
அன்பு மகனுக்காக.....
ஞாயிறு, 26 ஜூன், 2011
தீமைக்கு எதிராக தீபம் ஏற்றுங்கள்
பிஞ்சுக் குழந்தைகளை
நெஞ்சோடு இறுக்கி
பதுங்குக் குழிக்குள்
தாய்கள்
பரிதவித்த போதும்...
உரிமை கேட்டவர்களின்
உயிர்கள் பறித்த போதும்
பள்ளி செல்லும் மலர்கள்
முள்வேலியில் வாடியபோதும்...
நம்மினப் பெண்களின்
கர்ப்பப் பைக்குள்
சிங்கள நாய்கள்
விஷம் கலந்தபோதும்...
கண்களை மூடிக்கொண்ட
கயவர்கள் நாம்.
ஊரையே எரிக்கையில்
ஊமையாய் இருந்துவிட்டோம்
இன்றேனும்
தீபங்கள் ஏற்றி
தீமையை எதிர்ப்போம்.
இன்று மாலை 5 மணியளவில் மெரினா கடற்கரை கண்ணகி சிலையருகே தமிழ் உணர்வாளர்கள் அனைவரும் ஓர் இடத்தில் கூடி தங்களது அஞ்சலியையும் கோபத்தையும் பதிவு செய்ய இருக்கிறார்கள்.
Labels:
கவிதை,
சமூகம்,
நிகழ்வுகள்
ஞாயிறு, 19 ஜூன், 2011
வியாழன், 16 ஜூன், 2011
கொஞ்சும் நிலவு
கொஞ்சுமொழிக் காரியே
பிஞ்சு நிலவே
பிரியமான மகளே - உனகென்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
வேண்டாம் என்பதை
உடனே செய்கிறாய்
வேண்டிக் கேட்பதை
தீண்டிட மறுக்கிறாய்.
பல்துலக்கித் துப்பென்றால்
படக்கென்று விழுங்கிடுவாய்
முகங்கழுவச் சென்றுவந்தால்
முழுவுடம்பும் நனைத்திடுவாய்.
எண்ணெழுதும் புத்தகத்தில்
வண்ணங்கள் தீட்டிடுவாய்.
வண்ணங்கள் தீட்டச்சொன்னால்
எண்ணெழுத வேண்டுமென்பாய்.
முதுகில் கடித்தாலும் - நீயென்
முகத்தில் அடித்தாலும்
வலிப்பதில்லை எனக்கது
இனிக்கவேச் செய்கிறது.
அதிகமாய் சிலநாள்
அடம்பிடிக்கும் உன்னை
அடித்துவிட்டுப் பின்னர்
அழுதிருக்கிறேன் நான்.
தலையாட்டிப் பேசுவதே - முத்
தமிழாக இனிக்கிறது - நீ
விளையாட்டாய் சமைப்பதுவும்
விருந்தெனவே ருசிக்கிறது.
கொஞ்சுமொழிக் காரியே
பிஞ்சு நிலவே
பிரியமான மகளே - உனகென்
பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.
Labels:
கவிதை,
தியானா,
பிறந்தநாள்,
வாழ்த்து
சனி, 11 ஜூன், 2011
அலுவலக ஞாபகத்தில் பல்பு வாங்கும் பத்து தருணங்கள்
லொள்ளு லொள்ளும்பாங்களே அது இதானா?
- காலையில் எழுந்ததும் உங்க தங்கமணி கடைக்குப் போகச் சொல்வாங்க. பர்சை எடுத்து பாக்கெட்டில் வைத்தபின் பழக்க தோஷத்தில் ID கார்ட எடுத்து கழுத்துல மாட்டுவீங்களே!
- ஒருநாளும் இல்லாத திருநாளா ஹோட்டலுக்குக் குடும்பத்தோடு சாப்பிடச் செல்வீர்கள். சாப்பிட்டு முடித்ததும் அலுவலக பழக்கத்தில் தட்டை கையிலெடுத்துக் கொண்டு கை கழுவப் போவீர்கள்!
- அப்படிப் போகையில் தங்கமணி முறைத்து தவறைச் சுட்டியதும் தட்டை டேபிளில் வைத்துவிட்டு கை கழுவப் போவீர்கள். அங்கு போய் அலுவலக ஞாபகத்தில் கையை நீட்டிக் கொண்டு காத்திருப்பீர்கள்....தானே தண்ணீர் வருமென்று!
- ரொம்ப நாள் கழித்து உங்க நண்பர் தொலைபெசியிருப்பார். ஊர் கதை உலகக் கதையெல்லாம் அடித்துவிட்டு போனை வைக்கும் போது பழக்க தோஷத்தில் 'ஓகே பை பை, ஏதாவது பிரச்சனைனா திரும்பக் கூப்பிடறேன்' என்பீர்கள்!
- நாள் முழுதும் அவசரம் அவசரம்னே பேசிக்கேட்ட பழக்கத்தில் வீட்டில் சாப்பிடும் போது உங்க மனைவியிடம் அர்ஜென்ட்டா ஒரு தோசை கொடு என்பீர்கள். வெந்தா தான் தர முடியும் ரொம்ப அவசரம்னா தோசைய நேரடியா தட்ல தான் வார்க்கனும்னு சொல்வாங்களே!
- உங்க பிறந்த நாளுக்கோ அல்லது கல்யாண நாளுக்கோ உங்க பாஸ் வாழ்த்து அனுப்புவார். அதை படிக்காமலே பழக்க தோஷத்தில் உங்களுக்கு கீழே வேலை செய்பவருக்கு "please review & discuss " என்று பார்வார்ட் செய்வீர்கள்!
- கைப்பேசியில் SMS எதையோ டெலீட் செய்துவிட்டு அவுட்லுக் ஞாபகத்தில் செல்போனில் "deleted items " தேடுவீர்கள்!
- வேக வேகமாய் வீட்டுக்கு வந்து சாவியை எடுத்து பூட்டைத் திறக்காமல் கதவு திறக்க கார்டை நீட்டுவீர்களே! (இதை யாரும் பார்கவில்லை என்றாலும் சுயமாய்க் கொடுக்கும் சூப்பர் பல்பு இது.)
- ரொம்ப நாளைக்குப் பிறகு சினிமாவுக்குப் போயிருப்பீங்க. இடைவேளையின் போது உங்க மனைவி டைம் என்னங்கன்னு கேட்பாங்க. அதுக்கு நீங்களோ கடிகாரம் பார்க்காமல் திரையின் வலது புறம் கீழ் மூலையைப் பார்ப்பீர்கள்!
- ரொம்ப நாள் யோசிச்சு இந்த மாதிரி ஒரு ஐடியா க்ளிக்காகும். சரி ஒரு பதிவ தேத்தலாம்னு ஜிமெயில் லாகின் செய்வீர்கள். பாஸ்வார்ட் இன்வாலிட் என்று வரும். அப்ப தான் தெரியும் நீங்க போட்டது ஆபீஸ் USER ID என்று!
இந்தப் பத்தில் ஐந்து உங்களுக்கு நடந்திருந்தால்....அட நீங்க நம்மாளு!
செவ்வாய், 7 ஜூன், 2011
யானையும் நானும்-1
அம்புலியைத் துடைத்தெறியும் தும்பிக்கை படித்துவிட்டு என் மனைவி, 'கவிதைக்குப் பொய் அழகுதான் அதுக்காக இப்படியெல்லாம் சொல்லக்கூடாது' என்றாள். யானை எவ்வளவு புத்திசாலி தெரியுமா... ஒற்றுமையையும் பாச உணர்ச்சியும் அதனிடமிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டும். எப்போதும் கூட்டமாய் வாழும் யானைகள், ஒரு யானை இறக்கும் தருவாயில் இருந்தால் அதைச் சுற்றி நின்று கண்ணீர் விடும். இறந்தபின் அதைப் புதைத்த பின்னரே அந்த இடத்திலிருந்து நகருமென்றாள்.
அன்று முழுவதும் எனக்கு யானை நினைவாகவே இருந்தது. சிறுவயது முதலே எனக்கு யானை என்றால் மிகப்பிடிக்கும். யாரவது என்னிடம் மிகப்பிடித்த விலங்கு எதுவென்று கேட்டால் யானை என்றே சொல்லியிருக்கிறேன். என் பள்ளி நாட்களில் எந்த வனவிலங்கு சரணாலயத்திற்கும் சென்றதில்லை. திருவிழாவிலும் சர்கசிலும் யானை பார்க்கையில் என்னை மறந்திருக்கிறேன். நெற்றியில் பெரிய நாமத்துடன் தெருக்களை சுற்றிவரும் பெருமாள் கோவில் யானையிடம் சில்லறை கொடுத்தால் துதிக்கையை தலையில் வைத்து ஆசீர்வதிக்கும். அதுவே தலையில் துதிக்கையை வைத்து அழுத்துவது போலிருக்கும். அதனிடம் ஆசீர்வாதம் வாங்குவதை அடுத்த நாள் பள்ளியில் பெருமை பேசிக்கொள்வோம். ஆசீர்வத்திப்பதே தலையில் அடிப்பது போலிருக்கிறதே...அடித்தால் என்ன ஆகுமென்று சொல்லிச் சிரித்த நாட்கள் இன்னும் நினைவில் உள்ளது.
காடுகளில் சுதந்திரமாய் வாழவேண்டிய யானைகளை இப்படி கட்டிப்போட்டு வீடுகளில் பிச்சை எடுக்க வைக்கிறார்களே என்று தோன்றினாலும் சர்கஸ் யானைகளைப் பார்க்கையில் கோவில் யானைகள் நிலையே தேவலாம் என்று தோன்றும். சேலம் பழைய பேருந்து நிலையம் அருகில் போஸ் மைதானத்தில் ஒவ்வொரு வருடமும் "பாம்பே சர்கஸ்" போடுவார்கள். பலமுறை கேட்டபின் எங்களை ஒருமுறை அழைத்துச்சென்றார் அப்பா. அங்கு யானை பந்து விளையாடியதையும் சைக்கிள் ஓட்டியதையும் பார்த்துவந்து நண்பர்களிடம் ஒரு வாரம் பெருமை பேசியதுண்டு.
ஆனாலும் யானை பார்த்தல் என்னும் என் "யானைப்பசிக்கு" சோளப்பொரியே கிடைத்தது. கோவில் யானைகளைப் பார்க்கையில் நாமும் அதன் கூடவே சென்றிடலாம் என்று கூடத் தோன்றியதுண்டு. இப்படி நான் நேரில் பார்த்த யானைகளே மனதோடு நெருக்கமாய் இருந்தன. சினிமாவில் பார்த்த யானைகளுடன் சிநேகம் கொள்ளவில்லை என் மனது. பழைய தேவர் பிலிம்ஸ் படங்கள் கூடப் பரவாயில்லை. நம்கால ராமநாராயணன் படங்கள் யானைகளை அசிங்கப் படுத்துவதாகவே உணர்கிறேன்.
அம்புலிமாமாவில் இருந்து ஆனந்த விகடன் வரை யானை பற்றிய எந்த செய்தியையும் கதையையும் என் பள்ளி நாட்களில் தவறவிட்டதில்லை. எந்த ஒரு விசயத்தையும் முழுதாய்ப் புரிந்து கொள்ளாதவர்களிடம் கண்ணிலாதவர் யானையைத் தடவிப் பார்த்து உணர்ந்த கதையே இன்றும் சொல்லப்படுகிறது. என்றோ படித்த குட்டிக்கவிதை. மதத்தைப் பற்றி பேசும் யாரும் இந்த வரிகளை மேற்கோள் காட்டாமல் பேசுவதில்லை.
யானைக்கு வெறியினால்
பிடிப்பது மதம்
மனிதனுக்கு மதத்தால்
பிடிப்பது வெறி.
வைரமுத்துவின் விலங்கு கவிதையிலிருந்து சில வரிகள்...
விலங்குகள் நம்மினும்
மானமுள்ளவை
யானையின் காலில்
யானை விழுந்ததாய்
தகவல் இல்லை
பூனைக்கு எலிகள்
பல்லக்கு சுமந்ததில்லை
கரடிக்கு மான்கள்
கால்பிடித்து விட்டதில்லை
ஒன்று
சுதந்திரத்தின் வானம்
இல்லை
மரணத்தின் பள்ளம்
இடைப்பட்ட வாழ்க்கை
விலங்குக்கில்லை.
யானையைப் பற்றிய பதிவு சிறியதாய் இருக்கக் கூடாதல்லவா....அதனால் அடுத்த பதிவிலும் தும்பிக்கை நினைவுகள் தொடரும்.
ஞாயிறு, 5 ஜூன், 2011
பாபா ராம்தேவ் நள்ளிரவில் அப்புறப்படுத்தப்பட்டார்
கறுப்புப் பணம் மற்றும் ஊழலுக்கு எதிரான உண்ணாவிரதத்தை நேற்று துவங்கிய யோகா குரு பாபா ராம்தேவ் நேற்று நள்ளிரவே ராம்லீலா கார்டனில் இருந்து அப்புறப்படுத்தப்பட்டார். சுமார் ஒரு மணியளவில் உண்ணாவிரத மேடையில் தூங்கிக் கொண்டிருந்த ராம்தேவை எழுப்பி அவரை வேறு இடத்திற்குக் கொண்டுசெல்லப் போவதாக போலீசார் சொன்னதும், யாரும் வன்முறையில் ஈடுபடவேண்டாம் என்று மைக்கில் சொல்லிவிட்டு மேடையில் இருந்து குதித்து கூட்டத்துக்குள் புகுந்தார் ராம்தேவ்.
கூட்டத்தின் நடுவிலும் இதையே சொன்ன ராம்தேவ் மீண்டும் மேடைக்கு வந்ததும் அவரின் ஆதரவாளர்கள் அவரைச் சுற்றி மனிதச் சங்கிலி அமைத்தார்கள். கற்களையும் தீயணைப்புக் கருவிகளையும் கொண்டு ஆதரவாளர்கள் போலீசாரைத் தாக்க முயன்றனர். நிலமை மோசமடைவதை உணர்ந்த போலீசார் கண்ணீர்புகைக் குண்டுகளை வீசியும் தடியடி நடத்தியும் கூட்டத்தைக் கலைத்தனர். பாபா ராம்தேவ் கைது செய்யப்படவில்லை வேறு இடத்திற்கு மாற்றப் பட்டிருக்கிறார் என்று போலிஸ் தரப்பில் சொல்லப்படுகிறது. ஹரித்துவார் அழைத்துச் செல்லப்பட்டிருக்கலாம் என்றும் யூகங்கள் உலவினாலும் அவர் எங்கிருக்கிறார் என்ற அதிகாப்பூர்வ தகவல் வெளியாகவில்லை.
இச்சம்பவத்தில் போலிசாரின் தடியடியில் காயமடைந்த சும்மார் முப்பதுபேர் அருகிலுள்ள லோக் நாயக் ஜெய்ப்ரகாஷ் (LNJP) மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளனர். இந்நிலையில் பாபா ராம்தேவின் பக்தைகள் சுமார் இருபத்தைந்து பேர் மூத்த போலீஸ் அதிகாரியான கூடுதல் DCP டி கே குப்தாவைச் சூழ்ந்தனர். சீருடையைக் கிழிக்க முயன்ற அவர்களிடம் சில மெடல்களை இழந்து தப்பினார் DCP.
கூட்டத்தின் நடுவிலும் இதையே சொன்ன ராம்தேவ் மீண்டும் மேடைக்கு வந்ததும் அவரின் ஆதரவாளர்கள் அவரைச் சுற்றி மனிதச் சங்கிலி அமைத்தார்கள். கற்களையும் தீயணைப்புக் கருவிகளையும் கொண்டு ஆதரவாளர்கள் போலீசாரைத் தாக்க முயன்றனர். நிலமை மோசமடைவதை உணர்ந்த போலீசார் கண்ணீர்புகைக் குண்டுகளை வீசியும் தடியடி நடத்தியும் கூட்டத்தைக் கலைத்தனர். பாபா ராம்தேவ் கைது செய்யப்படவில்லை வேறு இடத்திற்கு மாற்றப் பட்டிருக்கிறார் என்று போலிஸ் தரப்பில் சொல்லப்படுகிறது. ஹரித்துவார் அழைத்துச் செல்லப்பட்டிருக்கலாம் என்றும் யூகங்கள் உலவினாலும் அவர் எங்கிருக்கிறார் என்ற அதிகாப்பூர்வ தகவல் வெளியாகவில்லை.
இச்சம்பவத்தில் போலிசாரின் தடியடியில் காயமடைந்த சும்மார் முப்பதுபேர் அருகிலுள்ள லோக் நாயக் ஜெய்ப்ரகாஷ் (LNJP) மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளனர். இந்நிலையில் பாபா ராம்தேவின் பக்தைகள் சுமார் இருபத்தைந்து பேர் மூத்த போலீஸ் அதிகாரியான கூடுதல் DCP டி கே குப்தாவைச் சூழ்ந்தனர். சீருடையைக் கிழிக்க முயன்ற அவர்களிடம் சில மெடல்களை இழந்து தப்பினார் DCP.
கடந்த ஒரு வார காலமாகவே ராம்லீலா கார்டனில் உண்ணாவிரதத்திற்கென சுமார் பதினெட்டு கோடி செலவில் தடபுடலான ஏற்பாடுகள் நடைபெற்றன. இரண்டரை லட்சம் சதுரடிக்கு சுமார் முப்பது அடி உயர நீர்புகா குடில்கள், 780 மின்விசிறிகள், 100 கூலர்கள், 7 பெருந்திரைத் தொலைக்காட்சிகள், 100 CCTV காமராக்கள் இதில் அடங்கும். இந்த மைதானத்தின் வாடகை மட்டுமே சுமார் மூன்று லட்சம். அது மட்டுமன்றி சுமார் 500 குடிநீர்க் கலன்கள் (ஒவ்வொன்றும் பதினாறு லட்சம் ரூபாய்கள்) மற்றும் 1300 கழிவறைகள், ஆம்புலன்ஸ் ஏற்பாடுகள், ஆளுயர பேனர்கள் என களை கட்டியது ராம்லீலா மைதானம்.
அரசும் உண்ணாவிரதத்தைத் தடுக்க தம்மாலான ஏற்பாடுகளைச் செய்து வந்தது. போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்ததுமே பிரதமர் மன்மோகன்சிங் ராம்தேவிற்கு கடிதம் எழுதினார். அதில் ராம்தேவின் யோசனைகளை அரசு வரவேற்பதாகவும், அவருடன் இணைந்து ஆவன செய்வதாகவும், போராட்டத்தைக் கைவிடவேண்டுமென்றும் எழுதினார். அதை ராம்தேவ் ஏற்காததால் கட்சியின் மூத்தத் தலைவர்களை அவசராமாகக் கூட்டி ஆலோசித்தார் பிரதமர். உண்ணாவிரதப் போராட்டத்தை நிறுத்தும் பொறுப்பு நிதித்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜியிடம் கொடுக்கப்பட்டது.
புதன் மாலை ராம்தேவ் தில்லி வருவதை அறிந்ததும் அவரை வரவேற்க மூன்று மத்திய அமைச்சர்கள் அனுப்பப்பட்டனர். மனித வளத்துறை அமைச்சர் கபில் சிபில், பாராளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பவன் குமார் பன்சால், சுற்றுலாத் துறை அமைச்சர் சுபோத் காந்த் சகாயுடன் அமைச்சரவைச் செயலர் கே.எம்.சந்திரசேகரும் இந்திராகாந்தி விமான நிலையத்தில் பாபா ராம்தேவைக் காத்திருந்து வரவேற்றனர். அந்தப் பேச்சுவார்த்தையும் பயனளிக்காததால் பிரணாப் முகர்ஜி மீண்டும் பேசினார். அதன் பிறகும் ராம்தேவ் உண்ணாவிரதப் போராட்டத்தில் உறுதியாக இருந்தார்.
அன்னா ஹசாரேவும் தனது ஆதரவைத் தெரிவித்ததோடு இன்று உண்ணாவிரத மேடைக்கு வருவதாக அறிவித்திருந்தார். சுமார் 32 லட்சம் பேர் தங்களை இந்தப் போராட்டத்திற்குப் பதிவு செய்திருப்பதாக தகவல் வெளியானதும் அரசு தரப்பில் இருந்து கறுப்புப் பணத்திற்கு எதிராக சட்டம் செய்யக் குழு அமைக்கப்ப் போவதாக உறுதிமொழியுடன் ராம்தேவிற்கு நேற்றிரவு கடிதம் அனுப்பப்பட்டது. கறுப்புப் பணத்தை நாட்டுடைமையாக்குதல், ஊழல் செய்வோருக்கு கடுமையான தண்டனை இந்த இரண்டைத் தவிர ராம்தேவின் 99 சதவீதக் கோரிக்கைகளை அரசு ஏற்பதாகச் சொல்லப்பட்டது. ஆகவே உண்ணாவிரதத்தை முடித்துவிட்டு தில்லியில் இருந்து வெளியேறுமாறும் அரசு தரப்பில் இருந்து அறிவுறுத்தப்பட்டது. அதையும் ஏற்காத ராம்தேவ், தனது கோரிக்கைகள் முழுவதும் ஏற்றுக்கொள்ளப்படும் வரை போராட்டம் தொடரும் என உறுதியாக இருந்ததால் அரசு தரப்பில் இருந்து இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
செவ்வாய், 31 மே, 2011
அம்புலியைத் துடைத்தெறியும் தும்பிக்கை
நண்பர் LK தனது கவிச்சோலை வலைப்பூவில் ஒரு கவிதைப்போட்டி அறிவித்திருக்கிறார். கீழுள்ள முத்தொள்ளாயிரப் பாடலுக்கு புதுக்கவிதை எழுதுவது தான் போட்டி.
பாடல்
வீறுசால் மன்னர் விரிதாம வெண்குடையைப்
பாற எறிந்த பரிசயத்தால்-தேறாது
செங்கண்மாக் கோதை சினவெங் களியானை
திங்கள்மேல் நீட்டுந்தன் கை.
கவிதை 1
வீரனாம் சேரனை
வெல்லவரும் பகைவர்தேரை
வீதியில் சாய்ப்பதும்
வெறிகொண்டு மிதிப்பதுமே
வேலையெனக் கொண்டதோர்
வெற்றி யானை.
விண்ணிலே மின்னிய
வெண்ணிலா கண்டதும்
அங்கோர் தேர்க்குடை
அசைகிறதே என்றெண்ணி
தும்பிக்கை நீட்டியே
துடைத்தெரியப் பார்த்ததாம்!
இது போட்டிக்கான என் கவிதை நீங்களும் எழுத வேண்டுமா?
மேலதிக விவரங்களுக்கு இங்கே செல்லவும்....
வீறுசால் மன்னர் விரிதாம வெண்குடையைப்
பாற எறிந்த பரிசயத்தால்-தேறாது
செங்கண்மாக் கோதை சினவெங் களியானை
திங்கள்மேல் நீட்டுந்தன் கை.
கவிதை 1
வீரனாம் சேரனை
வெல்லவரும் பகைவர்தேரை
வீதியில் சாய்ப்பதும்
வெறிகொண்டு மிதிப்பதுமே
வேலையெனக் கொண்டதோர்
வெற்றி யானை.
விண்ணிலே மின்னிய
வெண்ணிலா கண்டதும்
அங்கோர் தேர்க்குடை
அசைகிறதே என்றெண்ணி
தும்பிக்கை நீட்டியே
துடைத்தெரியப் பார்த்ததாம்!
இது போட்டிக்கான என் கவிதை நீங்களும் எழுத வேண்டுமா?
மேலதிக விவரங்களுக்கு இங்கே செல்லவும்....
கவிதை 2
வீரம் செறிந்த சேரமன்னனை
அம்பாரியில் அமர்த்தியே
வீறுநடை போடும் வெற்றி
வேழத்தின் துதிக்கைக்கு
செற்றார்தம் தேரினையும்,
வெண்கொற்றக் குடையினையும்
வீழ்த்துவதே வழக்கம்...
வழக்கமான பழக்கத்தினால்
வான்மதியும் வேற்றரசன்
தேர்க்குடையாய்த் தெரிந்திட
அக்கணமே அம்புலியைத்
துவம்சம் செய்திட - தம்
துதிக்கையைச் சுழற்றியதே
சூறாவளியாய்..!
Labels:
கவிதை
சனி, 28 மே, 2011
விசில் போடு!
IPL கிரிக்கெட் திருவிழாவில் இறுதிப்போட்டி இன்னும் இரண்டு மணி நேரத்தில் துவங்கப்போகிறது. விளையாட்டை விட வியாபாரமே இதில் முக்கிய பங்கு வகித்தபோதிலும் இளம் வீரர்களுக்கான களம் என்பதாலும் இருபது ஓவர்கள் மட்டுமே என்பதாலும் எனக்குப் பிடிக்கிறது. ஒவ்வொரு வருடமும் வீரர்களை ஏலத்தில் எடுப்பதால் யார் யார் எந்த அணியில் விளையாடுகிறார்கள் என்று விளங்கிக் கொள்ளும் முன்னரே ஒரு மாதம் ஓடிவிடுகிறது. அப்படித்தான் இம்முறையும் கடந்த ஏழு வாரங்களாக தினமும் குறைந்தது ஒரு மணி நேரம் IPL போட்டிகளைப் பார்த்து வருகிறேன்.
இன்று நடக்கும் இறுதிப் போட்டியில் சென்னையும் பெங்களூருவும் மோதுகின்றன. கடந்த நான்கு வருடங்களாக நடக்கும் இப்போட்டித் தொடரில் அனைத்துத் தொடர்களிலும் அரையிறுதிக்குத் தகுதிபெற்ற ஒரே அணி சென்னை மட்டுமே.
- இரண்டாயிரத்தெட்டாம் ஆண்டு நடந்த முதல் IPL தொடரின் இறுதிப் போட்டியில் கடைசி பந்தில் ராஜஸ்தான் அணியிடம் தோற்று கோப்பையைக் கோட்டை விட்டது.
- இரண்டாம் தொடரில் அரையிறுதிப் போட்டியில் பெங்களூருவிடம் தோற்று வெளியேறியது.
- சென்ற வருடம் முதல் போட்டியில் அப்போதைய நடப்புச் சாம்பியனான ஹைத்ரபாத்துடன் தோல்வியில் துவங்கிய சென்னை இறுதிப் போட்டியில் மும்பையை 22 ரன்கள் வித்தியாசத்தில் வென்று கோப்பையைக் கைப்பற்றியது.
- நான்காம் தொடரின் சூப்பர் இன்னிங்க்சில் முதல் போட்டியில் பெங்களூருவை வென்று இறுதிப்போட்டிக்குள் நுழைந்துள்ளது.
மூன்றாவது முறையாக இறுதிப்போட்டியில் விளையாடும் சென்னை வெல்ல நல்வாழ்த்துக்கள்.
UPDATE: 58 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அபார வெற்றி.
Labels:
கிரிக்கெட்
புதன், 25 மே, 2011
கழுதைக் கணக்கு
சமன்பாடு 1
மனிதன் = சாப்பாடு + தூக்கம் + உழைப்பு + மகிழ்ச்சி
கழுதை = சாப்பாடு + தூக்கம்
ஆகவே
மனிதன் = கழுதை + உழைப்பு + மகிழ்ச்சி
அதாவது
மனிதன் - மகிழ்ச்சி = கழுதை + உழைப்பு
தீர்வு: மகிழ்ச்சியாக வாழத்தெரியாத மனிதன் உழைக்கும் கழுதை.
சமன்பாடு 2
ஆண் = சாப்பாடு + தூக்கம் + பொருள் ஈட்டுவது
கழுதை = சாப்பாடு + தூக்கம்
ஆகவே
ஆண் = கழுதை + பொருள் ஈட்டுவது
அதாவது
ஆண் - பொருள் ஈட்டுவது = கழுதை
தீர்வு: சம்பாதிக்காத ஆண் கழுதை.
சமன்பாடு 3
பெண் = சாப்பாடு + தூக்கம் + செலவு
கழுதை = சாப்பாடு + தூக்கம்
ஆகவே
பெண் = கழுதை + செலவு
அதாவது
பெண் - செலவு = கழுதை
தீர்வு: செலவு செய்யாத பெண் கழுதை.
சமன்பாடு இரண்டு மற்றும் மூன்றின் படி
சம்பாதிக்காத ஆண் = செலவு செய்யாத பெண்
அதாவது
பெண் கழுதையாகாமல் இருக்க ஆண் சம்பாதிக்கிறான்.
ஆண் கழுதையாகாமல் இருக்க பெண் செலவு செய்கிறாள்.
ஆண் + பெண் = கழுதை + வருமானம் + கழுதை + செலவு
முடிவு : ஆணும் பெண்ணும் சேர்ந்து சம்பாதித்து செலவு செய்யும் இரு கழுதைகள்.
இந்த மொக்கைப் பதிவை படித்துவிட்டு என்னை திட்ட நினைப்பவர்கள் இதை எனக்கு ஆங்கிலத்தில் மின்னஞ்சல் செய்த கழுதையை திட்டுமாறு கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள்.
Labels:
நகைச்சுவை
ஞாயிறு, 22 மே, 2011
சிக்ஸர் அடித்தார் வைரமுத்து
கவிஞர் வைரமுத்து திரைப்பாடலாசிரியராக ஆறாவது முறை தேசிய விருது பெறுகிறார். முதல் மரியாதை, ரோஜா, கருத்தம்மா, சங்கமம், கன்னத்தில் முத்தமிட்டால் படங்களைத் தொடர்ந்து தென்மேற்குப் பருவக்காற்று படத்திற்காக இவ்விருதைப் பெறுகிறார். அவரை வாழ்த்தி மகிழும் இந்த இனிய தருணத்தில் எனக்கு மிகப் பிடித்த அவர் கவிதைகளில் ஒன்று உங்களுக்காக...
உன்னைப் பார்த்து உலகம் குறைக்கும்
தன்னம்பிக்கை தளர விடாதே
இரட்டைப் பேச்சுப் பேசும் உலகம்
மிரட்டும் தம்பி மிரண்டு விடாதே
ஒவ்வொரு வாயிலும் ஒற்றை நாக்கு
உலகின் வாயில் இரட்டை நாக்கு
எனக்கு நேர்ந்த இழிமொழி எல்லாம்
உனக்குச் சொல்கிறேன் உள்ளத்தில் எழுது
இன்னிசைத் தமிழை எளிமை செய்தேன்
இலக்கியம் இல்லை லேகியம் என்றது
திரைப்பாட்டுக்குள் செழுந்தமிழ் செய்தேன்
பரிமே லழகரை வரச்சொல் என்றது
குறுந்தொகை கம்பன் கொட்டி முழக்கினேன்
குண்டுச் சட்டியில் குதிரை என்றது
எலியட் நெருடா எல்லாம் சொன்னேன்
திறமை எல்லாம் திருடிய தென்றது
எளிய தோற்றமே இயல்பென இருந்தேன்
வடுக பட்டி வழியுது என்றது
அழகாய் நானும் ஆடைகள் கொண்டேன்
கழுதைக் கெதற்குக் கண்மை என்றது
மேடையில் கால்மேல் காலிட் டமர்ந்தேன்
படித்த திமிர்தான் பணிவில்லை என்றது
மூத்தவர் வந்ததும் முதலில் எழுந்தேன்
கவிஞன் நல்ல "காக்கா" என்றது
உயர்ந்தோர் பெருமை உவந்து புகழ்ந்தேன்
காதில் பூ வைக்கிறான் கவனம் என்றது
விரல்நகத் தளவு விமர்சனம் செய்தேன்
அரிவாள் எடுக்கிறான் ஆபத்து என்றது
மற்றவர் சூழ்ச்சியால் மண்ணில் விழுந்தேன்
புத்தி கொழுத்தவன் புதைந்தான் என்றது
மூச்சுப் பிடித்து முட்டி முளைத்தேன்
தந்திரக் காரன் தள்ளிநில் என்றது
பகையைக் கண்டு பைய நகர்ந்தேன்
பயந்துவிட்டான் பாவம் என்றது
மோதி மிதித்து முகத்தில் உமிழ்ந்தேன்
விளங்கி விட்டதா மிருகம் என்றது
பணத்தில் பொருளில் பற்றற் றிருந்தேன்
வறுமையின் விந்தில் பிறந்தவன் என்றது
என்னைத் தேய்த்து மண்டபம் கட்டினேன்
புலவன் இல்லை பூர்ஷ்வா என்றது
சொந்த ஊரில் துளிநிலம் இல்லை
இவனா மண்ணின் மைந்தன் என்றது
தென்னை மரங்கள் தேடி வாங்கினேன்
பண்ணையார் ஆனான் பாவலன் என்றது
கயவர் கேட்டால் காசு மறுத்தேன்
கறக்க முடியாக் கஞ்சன் என்றது
உண்மை இருந்தால் உறுபொருள் கொடுத்தேன்
உதறித் திரியும் ஊதாரி என்றது
மங்கைய ரிடையே மௌனம் காத்தேன்
கவிஞன் என்ற கர்வம் என்றது
பெண்கள் சிலருடன் பேசத் தொடங்கினேன்
கண்களைக் கவனி காமம் என்றது
விருதுகள் கழுத்தில் வீழக் கண்டேன்
குருட்டு அதிஷ்டம் கூடிய தென்றது
மீண்டும் மீண்டும் விருதுகள் கொண்டேன்
டெல்லியில் யாரையோ தெரியும் என்றது
திசைகள் தோறும் தேதி கொடுத்தேன்
அய்யோ புகழுக் கலைகிறான் என்றது
நேரக் குறைவு நிறுத்திக் கொண்டேன்
கணக்குப் பார்க்கிறான் கவிஞன் என்றது
அப்படி இருந்தால் அதுவும் தப்பு
இப்படி இருந்தால் இதுவும் தப்பு
கத்தும் நாய்க்கு காரணம் வேண்டாம்
தன்நிழல் பார்த்துத் தானே குறைக்கும்
உலகின் வாயைத் தைத்திடு; அல்லது
இரண்டு செவிகளை இருக்க மூடிடு
உலகின் வாயைத் தைப்பது கடினம்
உந்தன் செவிகளை மூடுதல் சுலபம்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)